திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

0

திருவெம்பாவை – 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

மரபில் வேர்விட்டு, நவீனத்தில் கிளைவிரித்தலை இன்று பல துறைகளில் பேசுகிறோம். ஆனால், இதை முதலில் காட்சிப்படுத்தியவர், மாணிக்கவாசகர். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்ற அவரது அடியொற்றியே இன்றும் நாம் மரபையும் நவீனத்தையும் ஒருசேர இணைத்துக் காண்கிறோம். அப்படி இணைந்திருப்பதை விரும்புகிறோம்.

பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் பரஞ்சோதியாம் சிவபெருமானைப் போற்றுவோம். திருவாசகத்தின் 9ஆவது பாடல் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளைப் பின்னைப் புதுமைகள் பல மேவிய டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் பாடுவதைக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *