கூட்லு அருவியை நோக்கி

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கூட்லு அருவியை இன்று காண்கின்றோம். கூட்லு தீர்த்தம் என அழைக்கப்படுகிற இந்த அருவி, உடுப்பியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்த்தியான கூட்லு காட்டுக்குள், கரடு முரடான பாதை வழியே சென்றால், இந்த அருவியைக் காணலாம். 300 அடி உயரத்திலிருந்து தண்ணீர் செங்குத்தாக விழுகின்றது. இந்தத் தண்ணீர் ஆறாக ஓடும் இடத்தில் படகிலும் செல்லலாம். இந்த வசீகர அருவியை நமக்காகப் படமெடுத்து வந்திருக்கிறார், காயத்ரி சேஷா.
Image Courtesy: Wikipedia
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)