பூகோள ராகம்

சி. ஜெயபாரதன், கனடா

அண்டவெளிக் களிமண்ணை
ஆழியில் சுற்றிக்
காலக் குயவன் கைகள்
முடுக்கிய பம்பரக் கோளம்!
உடுக்கடித்துக் குலுக்கும் மேளம்!
பூமி எங்கிலும் கடலடியில்
பொங்கிடும்  நாதம்!
ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை!
முதன்முறைப் பதிவு!
இயற்கை அன்னை வீணை நாதம்
மயக்குது மாந்தரை!
துளையிட்டுக் கேட்க பூமிக்குள்
நுழைவது யார்?
கடல் தட்டுகள் துடித்தால்
சுனாமி அலை அடிப்பு!
புவித் தட்டுகள் மோதினால்
பூகம்ப நடனம்!
குடல் தட்டு நெளிந்தால்
நிலக் குலுக்கல்!
சூழ்வெளி மாசாக
தாரணி வயிற்றுக்குள்ளும்
ஆறாத தீக்காயம்!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *