திருசிரமலை நாயகனே
சத்தியமணி 31 08 22

வெற்றி தரும் வேழமுக

மைந்து மினிதா னனடி
பற்றி பெறும் பாக்கியஉ

பாத்தி யமென தாளனடி
சுற்றி வரும் போதினிலே
மனதாள துயர் களைந்
தேற்றி தடையோட விடும்

பாலன் விளையாடி வரும்
நற்றி பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே….1

தாயுமா  னான்சிவ சிவம்
தாயுமை சேர்ந்து நலம்
தூயுமன தாளும் குணம்
வாயுமுட னாசியி னில்
காயமுடன் பிறக்கும் சுழல்
தேயவுட னாளும் நிலம்
பாயும் பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே….2

உச்சி மலையா ளுமறை
போற்று தயாபர எழில்
மெச்சி சிவசைவ குழாம்
ஏற்று பிள்ளை யாரெனவே
கச்சி யம்பலத் தானுறையும்
காமாட்சி பெற்ற தனால்
பச்சை பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே…..3

காப்பு அரையில் அரவுயிடை
கழலடி தண்டை மணிகளும்சேர்
தோப்பு கரணம் போட்டதுமே
துள்ளி நம்மில் ஏதுகுறை
மூப்பு பிணியா வுமதை
தீர்க்கு படியாகும் ரசம்
நீர்ப்புக பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே…….4

மாமன் ரங்க நாயகனும்
மருமான் மகிழவே நிலம்
மாமிய வளாடும் குழை
கேட்ட ணிந்தே தினம்
நாமமி னிதாக நெற்றி
நடுவி னிலிட்ட படி
தாமத தாளமு டன்சுக
தாள் பதித்தா டசிவ
ராகம் பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே…….5

சம்பு சலமாகி லிங்கம்
நந்தி உடனோடு தவம்
நம்பி துதிபாடி களிறு
காத்த ஆனைக் காவினிலே
தும்பி க்கையில் வலம்
தூக்கி யெம்நா விலுரை
எம்பி பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே……6

அண்ட சராசர பெற்று
ஆளும் அகிலா ண்டரசி
கண்ட சினம் தானழிய
கண்ணெ திரில் பேருருவே
உண்ட கொழுக் கட்டையதை
கவளமென தின்ற வனே
வண்டல் பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே……7

உருகி மனதுதி கள்பல
எழுதி தனக்கானத் தமிழ்
பருகி பெரும்வள மையுடை
புலமைத் தரும் கணபதியே
இருகி வரும் வளர்மதியே
ஏற்றமிகு பதவி புகழ்
மருகி பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே…..8

அரச மரத் தடியிலொரு
அருளாள நதியின் கரை
அரச ரும்முனி அகத்திர்சேர்
அடிபணிய வைக்கும் கரி
முரசரியும் முகத்தவனே
முக்காலம் அறிந்தவனே
பரிசப் பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே…..9

கருக விடும் அங்குசமும்
கனிய வரும் பூரணமே
அருக முடன் மாலையுள
அத்தி முகங் கணபதியே
எருக்க மொட்ட விழ்ந்திலே
எட்டிசெலும் தீவினைகள்
பெருக்கவர பொன்னி யலைவீச
திருசிர மலையமர நாயகனே…..10

சுமுகமாய் வேழாய்ப் போற்றி
சுகமு ம்மனத் துணிவே போற்றி
ஒற்றை கொம்பாய் போற்றி
ஓமென ஒலிப்பாய் போற்றி
சிராப் பிள்ளையே போற்றி
சிவஞானக் கொழுந்தே போற்றி
திருசிர மலையப்பா போற்றி
திருசிற் றம்பலம் போற்றி…11

ஒருநாளும் துவளாது

உன்பாதற் சலங்கையென
வருநாளும் துதிகள் பாடி
வாயினிக்க இசைகள் கூடி
திருநாளும் தரிசனமும்
தின்பண்ட பிராசதமும்
அருள்வாய் உமைபாலா
மணிநாதன் முன்சரணம்

…….இன்னும் வரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *