திருப்பூவணப் புராணம் – பகுதி – (17)

0

கி.காளைராசன்

பன்னிரண்டாவது

திருக்கலியாணச்சருக்கம்

 

968      அருமறைநான்கையும் கத்தடைத்தசீர்

மருவியசவுனகமகிழ்ந்துகேண்மியா

பொருவிடைப்பாகனப்பொருவின்மங்கையைத்

திருமணஞ்செய்ததுசெப்புவாமரோ

969      பரைதிருமணஞ்செயப்பரமன்றந்தசொல்

விரைமலர்க்கூந்தலார்விளம்பும்வேலையிற்

றரைபுகழ்தரவருதக்கனந்தநாட்

கரையிலாவின்பநற்கடலிற்றுன்னினான்

 

970      முச்சுடராகியமுக்கணெம்பிராற்

கிச்சகம்புகழ்தரவீன்றெடுத்தநன்

மைச்சருளோதியைமணம்புணர்ந்துவா

னச்சதுர்முகன்மகனகத்தினெண்ணினான்

 

971      உரையுணர்வறிவருமும்பர்தம்பிரான்

மருவியவுமைதனைவதுவையாற்றவே

திருநகரணிபெறச்செய்மினென்றுநன்

முரசறைகென்றனன்மூண்டகாதலான்

 

972      அக்கடிமணமுரசறைந்தகாலையின்

மைக்கருங்கண்மடமங்கைபங்குறை

முக்கணாயகன்மணமுடித்தல்காண்குவான்

தொக்கனர்யாவருந்துன்னியெங்கணும்

 

973      கோகனகாசலங்கொண்டகோபுர

மாகமூடுறநிமிர்மாடமாளிகை

தோகைகணடமிடுந்துதைந்தசூளிகை

யாகியபந்திசேராவணந்தொறும்

 

974      வம்புசேரிளமுலைமாதர்மேவிய

செம்பொன்மண்டபத்திருவாயில்சீர்தரப்

பைம்பொனன்மணிகொள்பூம்பந்தர்செய்தன

ரும்பருங்கண்டுதம்முள்ளநாணவே

 

975      பம்பியெண்டிசாமுகம்பரந்துசென்றிடு

வம்புலாமதுமலர்மாலைசாமரை

நம்புசீர்த்தருப்பணநலங்கொள்பூந்துகில்

கம்பலஞ்சூழ்தரக்கலந்துதூக்கினார்

 

976      மாடநீடியகொடிமகரதோரணங்

கோடகமுகங்கொளுங்குலையரம்பைசேர்

பாறுடுகோண்மடற்பாளைவிண்டசீர்

வீடரும்பூகதமிகநிறுத்தினார்

 

977      உலம்பொருகுவவுத்தோளுற்றமைந்தர்பூ

ணலங்கிளர்பொன்மணிநண்ணுநன்மணிக்

குலத்திகழலர்மலர்க்குப்பைவாரியே

யலங்கிடவேதிருவலகிட்டாரரோ

 

978      சந்தகின்மேவுசெஞ்சாந்தங்குங்கும

மந்தநற்றண்பனிநீரளாவியே

சுந்தரம்பெறத்தறைமெழுகித்தோன்றவே

சிந்தையிற்கொடுதிருக்கோலந்தீட்டினார்

 

979      விண்டலந்தங்கியவெண்ணிலாக்கதிர்

மண்டலந்தயங்குபாலிகையமைத்தன

ரண்டர்கணுண்டிடவட்டமங்கலங்

கொண்டிடுஞ்சோதியெண்டிசாமுகங்கொள

 

980      அத்திருவீதியினணிமயிற்புறாத்

தத்துவாம்பரிகரிதானைதேர்கிளி

சித்திரப்பொறியினாற்செய்துதத்தநன்

மெய்த்தொழிலியற்றிடவிதித்திட்டாரரோ

 

981      பூவிரிசோலையும்பூந்தடங்களு

மேவுதேரூர்மணிவீதியெங்கணுந்

தேவர்கள்யாவருஞ்சேருங்கற்பகக்

காவுறுநகரெனக்கற்பித்தாரரோ

 

982      மாதருமைந்தருமன்னுமந்நக

ராதரவான்மிகவணியியற்றலும்

போதுசேர்கின்றபொற்பொகுட்டிற்புங்கவன்

காதல்கூர்மகன்றிருக்கண்பரப்பினான்

 

983      நன்றிதுநன்றெனநவின்றுநாடியே

யொன்றியவுளத்தினிலுவகைபூத்தனன்

மன்றல்செய்தருந்திருமருகன்காமுறத்

தன்றிருக்கோயிலுந்தயங்கக்கண்டனன்

 

984      பொற்புறுமாலயன்புரந்தராதிய

ருற்றநன்மாதரோடொல்லையீண்டியே

மற்றுமையவடிருமணத்தைநோக்குவான்

சொற்றிடவொற்றரைத்தூண்டினானரோ

 

985      துங்கமோடடைந்தனரவர்க்குச்சொற்றலு

மங்கைதன்றிருமணங்காணமாதரோ

டங்கதுபோழ்தினிலரியயன்முதற்

புங்கவர்யாவரும்பொள்ளென்றீண்டினார்

 

986      ஈண்டுறாப்பண்ணவர்யாருமெய்தவே

நீண்டசெஞ்சடாடவிநிமலன்மேவிய

காண்டகுஞானநற்கற்பின்காரிகை

மாண்டவம்புரிகடிமாடத்தெய்தினார்

 

987      எய்தியபுங்கவரீண்டிச்சூழ்வரத்

துய்யபொற்பூவினாற்றூவித்துத்திசேர்

பையணிபன்னகாபரணநாயகன்

செய்யதாமரைப்பதஞ்சென்னிசேர்த்தினார்

 

988      அந்நிலைதன்னிலட்டாங்கமாகவே

பன்னிருகான்முறைபடியிற்றாழ்ந்தெழீஇத்

துன்னியவுளங்களிதூங்கவின்னணந்

தன்னிகரருந்தவத்தக்கன்சொல்லினான்

 

 

வேறு

989      ஆதிநாயகியடியனேனிடத்துதித்திடவு

நீதியாலவளின்பநன்மணஞ்செயநினைந்திப்

போதுநீயிவண்போதரப்பொருந்தியபொற்பால்

யாதுநற்றவம் புரிந்ததிவ்விருங்கடிநகரம்

 

990      என்றுபற்பலவியம்பியேபின்னருமிறைஞ்சித்

துன்றுசீர்த்திருமாலயன்சுரர்புடைநெருங்க

மன்றலாற்றவென்மனையிடைத்திருவுளமகிழ்ந்து

வென்றிமால்விடைதனில்வரல்வேண்டுமென்றிரந்தான்

 

991      இரந்தகாலையினெம்பிரான்றிருவுளமகிழ்ந்து

வருந்தனீயெனவேதிருவாய்மலர்ந்தருளி

யருங்கலன்கண்மெய்யிலங்குறவருமணமுடிப்பான்

பொருந்திநன்கினிதிருந்தனன்பொருவிடையதன்மேல்

 

992      மாலயன்புகழ்வாசவன்வானவர்முனிவர்

சீலமார்தருசித்தர்வித்தியாதரரியக்கர்

கோலவட்டவெண்குளிர்மதிகொடுங்கதிர்வெய்யோ

ரேலுமிக்கதாராகணமெண்வகைவசுக்கள்

 

993      அழிவிலாதவுருத்திரகணத்தவரநேகர்

வழுவிலாதுயர்மந்திரநாயகரேனோர்

கழிவரும்பெருங்காதலிற்கண்டுகண்களித்தார்

குழகன்கொண்டதோரழகியமணத்திருக்கோலம்

 

994      மைக்கருங்குழன்மங்கையோர்பங்குடைவானோன்

மிக்கவெள்ளிமால்வரைபுரைவிடையினிற்றோன்ற

வக்கணத்தினிலளப்பரிதாமுளக்களிப்பிற்

றக்கனுற்றதுசவுனகசாற்றரிதன்றே

 

995      அன்னகாலையினரியயனாதியர்போற்றப்

பொன்னினாட்டவர்கற்பகப்பூமழைபொழிய

மன்னுமந்தரமத்திமதாரகமரபாற்

பன்னுநான்மறைதும்புருநாரதர்பாட

 

996      வண்ணமேவுகுண்டோதரன்வண்குடைநிழற்ற

வண்ணவர்க்கிறையாலவட்டங்கொடுவீசத்

தண்ணருங்கடற்றலைவன்சாந்தாற்றிகாலசைப்பக்

கண்ணுறுங்கலாமதிகதிர்க்கவரிசேர்ந்திரட்ட

 

997      பம்புமாயிரமம்புலமானுமோர்பானு

கம்பனாயிரமுகத்தினுமாயிரஞ்சங்கந்

தம்பமாமிரண்டாயிரங்கைகொடுசாற்ற

நம்புமாயிரமறையொலிநாற்றிசைநடப்ப

 

998      சகலலோகமுநிலைபெறுதபநியமேருச்

சிகரமால்வரைதிகழுமொராயிரந்திண்டோண்

மிகுமணித்தொடிக்கரத்தினான்மேவியவாணன்

முகிலெனக்கொடுமுழக்கிடுமுழவொலிமுழங்க

 

999      பாழிசேர்துடிகாகளம்பரந்தவாய்ப்பதலை

வாழிமாலொருகட்பறைவயிர்சிறுசின்னந்

தாழ்வில்பேரிகைசல்லரியாதிசாரதங்கள்

குழுமாழியோரேழினதோசையிற்றுவைப்ப

 

1000    ஆதிநாரணனாகியபண்ணவரார்ப்பும்

பூதநற்கணந்துவைத்திடுபொங்கியத்தொலியு

நாதகீதத்தினோதையுநான்மறையொலியுங்

கோதிலண்டகோளகைமுகட்டினிற்குடியேற

 

1001    கன்னிதன்னொடுந்தவம்புரிகடிமணிமாடந்

தன்னினின்றுமத்தக்கன்மாமனையிடைச்செல்வான்

முன்னவன்றிருமுதற்பெருவாயில்களொருவிப்

பொன்னிநாட்டமர்மாடநீண்மறுகினிற்போந்தான்

 

1002    போந்தகாலையிற்பொங்கரவல்குலார்செம்பொன்

வாய்ந்தமாடத்துங்கூடத்துமன்னுகோபுரத்து

மேய்ந்திலங்கு செய்குன்றினுமெழின்மறுகெங்குஞ்

சேர்ந்துசெங்கைகள் குவித்தனர்களித்தனர்திளைத்தார்

 

வேறு

1003    எந்தைபெருமானழகிருந்தபடிகாணூஉச்

சுந்தரமலர்ப்புதியசுண்ணமவைதூவி

யிந்தவுமைதன்னையிவனின்பமணமேய்வான்

வந்தருளுமந்தமணவாளனிவனென்பார்

 

1004    மைக்கரியகண்டனருண்மாதுதனைவெமூகி

யிக்கடிநகர்த்தெருவெழுந்தருளமேனாண்

மிக்ககமலக்குரிசின்மெய்த்தவமளித்த

தக்கன்மகள்செய்ததவமேதவமதென்பார்

 

1005    இத்திருநகர்க்கணுமையின்பமணநாடி

யத்தனணைகின்றபரிசாரறியகிற்பார்

சத்தியமெய்ஞ்ஞானசிவசத்திதவமேவும்

பத்தியவள்கைமிசைபலித்ததிமூதென்பார்

 

1006    உள்ளமிகழ்கூரவருளுத்தமமதாமேல்

வள்ளலெனவந்தமடமங்கைமணவாளற்

​​கெள்ளரியபூணணியிருங்கலைகளெல்லாங்

கொள்ளுமெனநின்றுசிலர்கொள்ளைகள்கொடுப்பார்

 

1007    ஐயன்மணிமகுடமிகுமாதவர்கொலென்பார்

செய்யதிருவாயழகுசெம்பவளமென்பார்

துய்யமதுமாலைபுனைதோள்வரைகளென்பார்

மெய்யணிவிழுங்கியதிம்மேவுமணியென்பார்

 

1008    கண்ணுதலெம்மண்ணமன்மிகுகாமநிகழென்பால்

வண்ணமுறுகாமர்சரமாரிபொழியக்கண்

டெண்ணுலகிலின்பசுகமேவவநுபோக

நண்ணுகிலனென்னவிவனாகரிகமென்பார்

 

1009    காண்டகையகாமவிரகக் கடல்விழாது

நீண்டதொடைநல்கெனநினைந்தருள்செய்கில்லான்

வேண்டினர்தமக்கவர்கள்வேண்டியவைநல்கு

மாண்டகைதனக்கிமூதடாதெனவுரைப்பார்

 

1010    தங்குகழைவிற்றனதுசெங்கையினெடுத்துத்

துங்கமதினீலமலரம்பதுதொடுத்தான்

மங்கையைமணம்புணரவந்தருளும்வள்ள

லெங்களகமீதிதினெழுந்தருளுமென்பார்

 

1011    நந்தமனைநண்ணுமெனநண்ணுகிலனென்பா

ரிந்தவிறைநந்தமனையெய்தரியனென்பார்

பந்தணிவிரற்பரவைபாலிருளின்முன்னாட்

சுந்தரன்விடுப்பவருதூதனிவனென்பார்

 

1012    கந்தமலரம்பன்விடுதூதுகளகண்டங்

கொந்துலவுசோலைபயில்கூற்றமிதுவென்பார்

மந்தமருதங்கொல்வடவானிலமதென்பா

ரிந்தமிதமொண்டழலிறைக்குமினியென்பார்

 

1013    நன்றுமிகநன்றுமிகநாடினமரங்காள்

வென்றிவிடையேறியிவன்வீதியிடைபோத

வன்றில்பகையாழிபகையாயர்குழலோடித்

தென்றல்பகையென்றுசிலர் செப்பியிடுகிற்பார்

 

1014    எண்டரிலிவன்றினமெழிற்பிரமசாரி

யொண்டொடியுமோதினமுமுன்னிலொருகன்னி

பெண்டகைமணம்புணர்தல்பேசினமாங்காள்

கண்டறிகிலாதகலிகாலமிதுவென்பார்

 

1015    சந்தமறையேபரவுதக்கன்மருகோனென்

றிந்தமறுகூடிருவரின்னுமறியொண்ணா

நந்தியுமைநன்மணநயந்துநமரங்காள்

வந்தருளுகின்றதெனமாயமிமூதென்பார்

 

1016    சங்கரன்விரும்பிவிடைதன்னிலிவண்மன்னி

மங்கையைமணம்புணரவந்ததெவனென்பார்

சங்கரன்மணம்புணர்தல்சாற்றினமரங்காள்

மங்கையருமைந்தருமணம்புணரவென்பார்

 

1017    என்றெழுவகைப்பருவமாதர்களியம்பி

நின்றுதொழமாடமலிநீண்மறுகுநீங்கா

வென்றியயன்மால்கைகொடுவெள்விடையிழிந்து

மன்றல்புரிமாடமணிவாயிலிடைவந்தான்

 

1018    வந்தருளெந்தைமுன்மாதர்நிம்பநற்

பைந்தளிர்செய்யகாற்பாசஞ்சேர்ப்பராற்

சிந்துறுமிலவணந்திரன்பகற்சுடர்

சுந்தரக்கலங்கொடுசுலவிப்போயினார்

 

1019    காரணகாரியங்கடந்துநின்றதோர்

பூரணன்பதத்தினான்பொழிந்தகீரத்தா

லாரணவல்லிவந்தடிவிளக்கியே

சீரணிதன்றிருமனையிற்சென்றனள்

 

1020    படர்ந்தமாமணிவெயில்பரப்புஞ்சோதிவா

னடர்ந்துசென்மணட்பமதனினாப்பணோர்

முடங்குவாலுளைமணிமொய்த்திலங்குநன்

மடங்கலாசனத்தினில்வந்துதோன்றினான்

 

1021    மாலயனாதியவானுளோரெலா

மேலவனேவலின்விருமப்பினோங்குநற்

கோலமாநவமணிகுயிற்றிடுங்கதி

ரேலுமாசனங்களினினிதினேறினார்

 

1022    பாரினும்விசும்பினும்படர்மணிக்கதிர்

மேருமால்வரையெனவிளங்குமண்டபச்

சீரியவளனெலாந்திருக்கண்சாத்தினா

னாருயிர்க்குயிரதாயமர்ந்தநாயகன்

 

1023    பன்னருமன்னுயிர்படைக்கும்பண்பினான்

மன்னியநன்பெருவளங்கணல்கலாற்

றென்னுறுதிசாமுகஞ்சேர்ந்திலங்கால

லன்னமண்டபமலரயனையொத்ததே

 

1024    மேலுறநிமிர்ந்துவான்வெளியடைத்தலாற்

சீலமாம்பொறிமயில்சேர்ந்திலங்கலாற்

கோலமாகியவுருக்கொண்டிலங்கலான்

மாலவன்போன்றதம்மாடமண்டபம்

 

1025    உவமனற்றியாவருமுரைக்கொணாமையா

லிவையெனவியம்பருமின்பமீகையா

னவையறுசிறப்பினினண்ணியோங்கலாற்

சிவபிரான்போன்றதச்செம்பொன்மாடமே

 

1026    முத்தொழிலியற்றிடுமூவர்சேர்தலாற்

சத்தியவுலகமுந்தகுவைகுண்டமு

மத்தனதுலகமுமவனிசேர்ந்ததை

யொத்ததம்மணவினைக்குரியமாடமே

 

1027    அங்கதுகாலையினருமறைக்கொடி

தங்கியமனையிடைத்தானெழுந்தரு

ளெங்கணாயகியுலகெங்குமீன்றருண்

மங்கைதன்செய்கையைவழுத்துவாமரோ

 

1028    மாயிருஞாலஞ்சேர்மன்னுயிர்க்கெலாந்

தாயெனவந்தருடம்பிராட்டியை

நேயநன்மறைக்கொடிநெருங்கப்புல்லினா

ளாயிழையார்களுமடிவணங்கினார்

 

1029    மருவியமஞ்சனமாட்டிவார்ந்தநற்

புரிகுழலீரமெய்புலர்த்திப்பொங்கெழி

லரவகலல்குலினம்பொன்மாமணி

யுரியசெம்பட்டினையுவந்துசாத்தினார்

 

1030    மண்டியவகிற்புகைவாசமூட்டியே

கொண்டல்சூழ்நித்திலக்கொத்துமாலைபொன்

முண்டகக்கரங்களான்முடித்துக்கூந்தலி

னெண்டருஞ்சிகழிகையிலங்கச்சூட்டினார்

 

1031    தருணமிக்கலிங்கியசந்திரோதயத்

திருமுகமழகுறத்திலகஞ்சேர்த்தினார்

வரிபரந்தொழுகியமதர்நெடுங்கணி

லிருளுமிழஞ்சனமெழுதினாரரோ

 

1032    இருசுடருதயமால்வரையினேய்ந்தெனக்

கருதருமணிக்குழைகாதுசேர்த்தினார்

திருமிகுமங்கலநாண்டிகழ்ந்திட

மருவுகந்தரமணிமாலைசேர்த்தினார்

 

1033    நுணுகிடைமுரிதரநுவலருந்திரு

மணமலிகுங்குமமன்னுதேய்வையா

லிணையறவேபுடைத்தெழுந்தவேந்திளந்

துணைமுலையணிபெறத்தொய்யிறீட்டினார்

 

1034    பழுதறுபசும்பொனிற்பதித்தபான்மைசேர்

கழுவியநன்மணிக்கற்றைத்தூறுசீர்

கெழுதகுவயிரகேயூரங்கேழ்கிள

ரழகியதோள்களிலலங்கல்சேர்த்தினார்

 

1035    சூழுறுதிசாமுகந்தொறுநிறைந்துறும்

பாழிசேர்மிகுவெயில்பரந்தெறித்திடு

மேழிரண்டென்னவேயிசைக்குநன்மணி

யாழிகளங்குலியணிந்திட்டாரரோ

 

1036    ஓதிடுமுவமனாலுரைக்கொணாதநற்

காதலிற்கனவளைகவினச்சேர்த்தியே

மேதகுநவமணிவிட்டெறிந்திடுஞ்

சோதிசேர்சூடகந்துணைக்கைசேர்த்தினார்

 

1037    நற்கமலத்திருவழகுநண்ணியே

பொற்பதந்தனிற்றெழில்பொருந்தப்பொற்கொலர்

பற்பகலியற்றுநற்பாடகத்துடன்

செற்றியசில்லரிச்சிலம்புசேர்த்தினார்

 

1038    உணர்வருந்திருவருளுமையையின்னண

மணியினுக்கணிகலனணிந்ததாமென

மணவணிபுரிதலுமகிழ்ந்துதக்கனேர்

பணிதலுற்றெழுந்தருள்கெனப்பராயினான்

 

வேறு

1039    தங்குபுகழ்த்தக்கனிமூதுரைத்திடலுமுடனெழுந்துசததளப்பூஞ்

செங்கமலத்திருக்கோயிற்றிருமாதுங்கலைமாதுஞ்செங்கைதாங்கப்

பொங்கரவவகலல்குற்புலோமசைமுன்போற்றமணம்புணருங்கோல

மங்கலஞ்சேர்மாடத்தின்மன்னுமரசன்னமெனமங்கைசேர்ந்தாள்

 

1040    சேர்ந்தருளுமுமையாடன்செங்காந்தட்கரங்குவித்துச்சிவபிரான்முன்

போந்தெதிர்நின்றிறைஞ்சிடத்தன்புடையிருத்தியென்றருளிற்புகறலோடு

மார்ந்தசெழும்பல்லியங்களார்கலியினார்ப்பெடுப்பவமரர்போற்ற

வேந்தரியாசனத்தேறியுடனிருந்தாளுலகீன்றவெம்பிராட்டி

 

1041    எங்கள்பெருமாட்டியுடனெம்பெருமானெழுந்தருளியிருப்பத்தக்கன்

றுங்கமறைக்கொடிவளைக்கைத்தூமலர்மஞ்சனமாதிசுமந்துநிற்ப

வங்கணன்றனடியிணையிலருக்கியமீந்தருச்சனைசெய்தான்பால்கொண்டு

பங்கயப்பொற்பதம்விளக்கிப்பைந்தொடியையளித்திடுவான்பரிவுகூர்ந்தே

 

1042    எம்மையினிதாண்டருளென்றியாவருமேபணிந்தேத்துமெம்மான்றன்னை

நம்மருகனென்றெண்ணிநாயகியைநிற்களித்தேனானேயென்னா

வெம்முனைசேர்வேனெடுங்கண்விளங்கிழைசெங்காந்தளங்கைதன்னைமிக்க

செம்மணிப்பொற்குண்டிகையிற்றிகழ்திருமஞ்சனமரன்றன்செங்கையீந்தான்

 

1043    அந்நிலையிலயனெடுமாலமரர்முனிவரரிறைஞ்சியார்வங்கூர்ந்தார்

பன்னுமரம்பையர்கானம்பாடிநடமாடினர்முன்பணிந்துபாங்காற்

றுன்றுதிரைக்கடலெனவேசொல்லரியபல்லியங்கடுவைத்தார்பூதர்

தன்னருளைக்கைகலந்துதனதுதிருவுளமகிழ்ந்தான்றாணுவானோன்

 

1044    மண்டபநின்றிலங்கவட்டமங்கலமும்பாலிகையுமரபிற்றந்தாங்

கண்டர்மனங்கண்டுவப்பவருத்திமிகுந்தருப்பைமலராச்சியத்தாற்

குண்டமதிற்கொழுந்தழன்மேற்கொழுந்துவிடத்தானினைந்துகூட்டிமூட்டிப்

பண்டருநான்மறைமுறையிற்பரிவினெரிவளர்த்தனன்பல்லுயிர்படைப்போன்

 

1045    நாலுமுகனின்பமணச்சடங்குமுடித்திடலும்மேநஞ்சமுண்டு

நீல்மணியெனமிடற்றுநீங்காமற்பழுத்தோங்குநிமலமூர்த்தி

மாலயனேமுதலானவானவர்சூழந்திடத்தக்கன்மருகனானோன்

கோலமதனைக்காய்ந்தகுறிக்கரியதனதுதிருக்கோலங்கொண்டான்

 

வேறு

1046    வானோர்பெருமான்மறைந்திடலும்வண்டுறங்குந்

தேனார்ந்தகஞ்சத்திருவாணிதம்முழைச்சேர்ந்

தானாமணியிழந்தவவ்வரவமேயென்னக்

கானார்ந்தகூந்தற்கவுரியிவைகட்டுரைப்பாள்

 

1047    பன்னாளருந்தவங்கள்பண்ணியவென்பாக்கியத்தா

லென்னாயகன்றானேயென்பாலெழுந்தருளி

நன்னாளெனவுவந்துநன்மணமுஞ்செய்தருளி

யிந்நாண்மறைந்ததியானேதென்றறியேனே

 

1048    இன்னமும்யான்காண்பேனோவெம்மான்றனதுதிருச்

சென்னியின்மேற்சேர்ந்திலங்குஞ்செம்பொன்மணிமுடியும்

பன்னுமறைபாடும்பவளத்திருவாயு

முந்நூன்மணிமார்புமூன்றுநயனங்களுமே

 

1049    கண்ணாலினுமொருகாற்கண்டுகளிகூர்வதெந்நாள்

விண்ணார்நதிமிலைச்சுமிக்கபவளச்சடையு

மண்ணாடையானமகராலயத்தெழுந்த

வுண்ணாதநஞ்சதனையுண்டிருண்டகண்டமுமே

 

1050    எந்தநாட்கண்டிங்கினியானிறைஞ்சிடுகேன்

சுந்தரஞ்சேருங்கடகத்தோள்களொருநான்கும்

வெந்ததிருநீறணிந்தமேனியுந்தன்மெய்யடியார்

பந்தமறுத்தாண்டருளும்பாதாரவிந்தமுமே

 

1051    இங்கினியானென்றோவிறைஞ்சப்பெறுவேனான்

சங்கக்குழைதான்றயங்குகின்றவார்காதுந்

திங்கள்விளங்குந்திருமுகத்தின்சேவையுமேற்

பொங்கிவழிகாதற்பொருந்துமணக்கோலமுமே

 

வேறு

1052    என்றென்றுபினுமிறைவாவெனுமா

லொன்றும்மினியானுரையேனெனுமாற்

பின்றங்குசடைப்பெருமானருடா

னன்றிங்கிதெனாநகைசெய்திடுமால்

 

1053    பொன்றோய்சடிலப்புனிதன்மறையுஞ்

சென்றோங்குபுகழ்த்திசைகைதொழுமா

லொன்றோவுரையாமலொளித்தனையா

னன்றோசிவதாநடுவோவெனுமால்

 

1054    இருளாணவநீங்கிடவேயெனையோர்

பொருளாகமனைப்புகுந்தாண்டுமெனக்

கருளாதெவனோவறியேனெனுமான்

மருளாதினமும்வருமோவெனுமால்

 

வேறு

1055    என்றுபன்னியிரங்கும்விழுமெழு

நின்றசோர்ந்திடுநெட்டுயிர்ப்பெய்திடுங்

கன்றுநெஞ்சகங்காந்தளங்கையினா

லொன்றுமாநிலத்துற்றிடவெற்றிடும்

 

1056    தாங்குஞ்சூடகத்தாமரைக்கைகளாற்

பூங்கருங்குழன்மாலையைப்போக்கிடுங்

கோங்கரும்பன்னகொங்கைமுகட்டினி

லோங்கியேபின்னொலித்திடவெற்றிடும்

 

1057    காசிலாதகதிர்மணிமண்டபத்

தாசைபோலகலல்குனன்மாதரா

ரேசவேமணஞ்செய்தென்பயனெனும்

பேசில்யான்பெண்பிறந்தென்பயனெனும்

 

1058    செல்லும்வானிற்றிசைதனைநோக்குமென்

சொல்லுகேனென்றுதுண்ணெனச்சோர்ந்திடும்

வல்லுலாவும்வனமுலைமுன்றிலிற்

கல்லுமுத்தெனக்கண்புனல்கான்றிடும்

 

1059    இன்னதன்மையையெண்ணியிலங்கிழை

மன்னுநாதன்மறைக்கொடிமாமல

ரன்னமன்னவளன்னையைவாழ்த்தியே

துன்னுகின்றனர்சூழ்ந்திவைசொல்லுவார்

 

1060    மாதராய்நின்மனந்தளரற்கநற்

காதலாலுனைக்கண்ணுதற்சாமியிப்

போதுவந்துபொருந்துவனன்கெனா

வாதரத்துடனங்கவர்தேற்றினார்

 

1061    தேற்றிப்பின்னருந்தேமொழிமாதரா

ராற்றவேநின்னருமணக்கோலத்தை

நோற்றநோன்பினுவலருமப்பலப்

பேற்றினாற்றொழப்பெற்றனமியாமென்றார்

 

1062    என்றகாலையினெம்பெருமாட்டிதான்

றுன்றுமாதர்குழுவைத்துறந்துநீண்

மன்றல்சேர்கடிமாத்தினெய்தியே

யொன்றுமாதவமுற்றிருந்தாளரோ

 

1063    உற்றவேலையினோதிடுமாலயன்

மற்றியாருமனந்தளர்வெய்தியே

கற்றைவார்சடைக்கண்ணுதலண்ணறன்

பெற்றிநாடரிதென்றென்றுபேசினார்

 

வேறு

1064    எம்பிரான்மறைந்தேகலுமெண்கணன்றருஞ்சேய்

வெம்பியுள்ளம்வெகுண்டுமெய்வியர்த்தறவெள்கித்

தம்பமாகியதடக்கையொன்றோடொன்றுதாக்கி

யம்புயக்கைநாசாக்கிரத்தமைத்திவையறைவான்

 

1065    என்னருந்தவப்பேற்றினாலீன்றமெய்ஞ்ஞானக்

கன்னிபாகன்வான்கங்கைமாநதியலையெறிக்கும்

பின்னறாழ்ந்திடப்பேயுடனாடியபித்தன்

நன்னர்நண்புணர்கின்றதுநன்றெனநக்கான்

 

1066    ஈதியாலெனவென்மகடனையிவண்மேவ

வேதநூனெறிமேவியவிண்ணவர்வியப்பக்

காதலாலருங்கடிமணமுடித்தனன்யானிப்

போதிவன்புகல்கணவனென்றறிந்திலன்போலாம்

 

1067    தெரியின்யானினிச்செப்புவதென்னையோவண்ணங்

கரியமாலயன்கண்ணுதலாகியகள்வன்

பெரியர்யாவரேயென்னினும்பிழைத்திடவெண்ணி

லரியதோர்தலைவிதியினைவிலக்கிடலாமோ

 

1068    ஆதலாலிமூதென்றலைவிதியிதுவாயி

னேதுசெய்குதிர்நீவிரென்றியம்பிமான்முதலோர்ப்

போதுநும்பதியெனவவர்தமையிடம்போக்கி

நாதனார்செயனாடியேநண்ணிடுநாளில்

 

1069    பூதிசாதனமுந்திரிசூலமும்பொருதுங்

காதில்வெண்குழையுங்கரகபாலமுஞ்செய்ய

பாததாமரைப்பரிபுரமும்படர்சடையு

மாதுகாதலோர்தாபதன்போலிறைவந்தான்

 

1070    வந்ததாபதன்றன்னெதிர்வந்துவந்தனைசெய்

தெந்தைதன்னடியானெனவேத்தலுமிரங்கிக்

கந்தவார்குழற்காரிகைகண்டுகண்களிப்பச்

சுந்தரங்கொள்வெள்விடையினிற்றோன்றினன்றொல்லோன்

 

1071    தோன்றலாங்கெதிர்தோன்றலுஞ்சுந்தரிதுணுக்குற்

றான்றவன்புடனளிக்குலங்களிக்குமம்புயத்தா

ணான்றபூங்கழறைவரநன்கினிதிறைஞ்சி

யேன்றநற்றுதியியம்பிநீயிரங்கெனவிரந்தாள்

 

1072    இரந்தகாலையினெம்பெருமாட்டியையெங்கோன்

வருந்தனீயெனவேதிருவாய்மலர்ந்தருளி

விரும்பியேபொருவெள்விடைமீதுடனிருத்திப்

புரந்தராதியர்போற்றிடக்கயிலையிற்போந்தான்

 

1073    போந்தகாலையிற்பொருந்தியசேடியர்விரைந்து

சார்ந்துதக்கனைத்தாழ்ந்துநீதந்தருண்மருந்தை

யேந்திடும்புனற்சடிலன்வந்தெழில்விடையேற்றிக்

காந்துவெண்மதிக்கதிர்விடுங்கயிலையிற்படர்ந்தான்

 

1074    என்றவேலையினிறைமகனெம்பிரான்றன்னை

யொன்றுசீற்றமேற்கொண்டுநிந்தனைசெய்யவும்பர்

கன்றுமான்மழுவேந்தியகண்ணுதற்பெருமான்

மன்றலங்கழன்மதித்திடாதுரைத்திடல்வழக்கோ

 

1075    ஆதலாலரனம்புயமருவியசெம்பொற்

பாதமீதினிற்பரிவொடுபணிவதேபாங்காற்

போதியென்றுபுத்தேளிர்கள்போற்றிசெய்திசைப்ப

வோதுநீள்விசும்பிடறிடுங்கயிலையையுற்றான்

 

1076    உற்றவானதியுவட்டெடுத்தெழுந்தலைகொழிக்குங்

கற்றையஞ்சடைக்கண்ணுதற்சாமிதன்கோயின்

முற்றுமாமணியெறித்திடுமுதற்பெருவாயிற்

பொற்பினேறினன்போகலையென்றனர்பூதர்

 

1077    பூதர்நீவிர்தாம்போகலையென்றதென்புவிமே

லோதரும்பெருந்தவம்புரிந்துவந்தியானீன்ற

மாதராண்மணமருவியவொருதிருமருகன்

காதலாற்கலந்திருத்தல்யான்காணியவந்தேன்

 

1078    என்றுதக்கனீதியம்பலுஞ்சாரதர்வெகுண்டே

யுன்றன்மாமுகநோக்கினுமுற்றிடுநிரயம்

பின்றயங்குசெஞ்சடிலனைப்பேசிமுனிந்தை

நன்றுகாணியவந்ததுநவின்றிடினகையே

 

1079    அன்றியெந்தைநின்மருகனாயம்பிகைமகவா

யுன்றனாணையிலுலகெலாமொருதனிச்செங்கோ

லென்றுமோங்கிடவீந்ததையயர்த்திநீதக்க

கொன்றுநன்றியைத்தின்றுழல்கூற்றனேகொடியாய்

 

1080    இன்னுமொன்றுநன்கியம்புவங்கேட்டியாலெங்கோன்

பொன்னடிக்கமலந்தொழப்போதுவையாயின்

மன்னுகிற்றியாலன்றெனில்வந்திடும்வழியே

நின்றனக்கினிதேகெனநிகழ்த்தினரன்றே

 

1081    அந்தவாசகங்கேட்டலுமக்கொடுந்தக்கன்

கந்தமாமலரோன்முதற்கடவுளர்யாரும்

வந்தெனாணையின்வழிபிழைக்கின்றிலரதனா

லெந்தஞான்றினுமிறைவனையிறைஞ்சலன்யானே

 

1082    திருமணிப்பெருங்கோயினீசெல்லலென்றதுதா

னுரியநற்றவத்தியான்றருமொருமடக்கொடியு

மருவுமென்றிருமருகனும்வழங்கியமாற்றங்

கருதினும்முறையன்றிதுவென்றுகட்டுரைப்பான்

 

1083    பரவுகின்றநும்பரஞ்சுடர்தன்னையாவருமே

கருதிடாவகைகாண்குவனன்னதுகாண்டிர்

பொருவில்செய்கையான்புகழ்பெறப்புரிகுவலென்னாத்

திருகுசிந்தையாலினையனசெப்புதலுற்றான்

 

1084    வீடருங்கொடும்பவந்தொறும்விஞ்சியசெம்பொற்

பாடகந்தரும்பழகியதீவினைபற்றிப்

பீடுறாவகைபிடர்பிடித்துந்திடப்பெருஞ்சீர்த்

தேடரும்புகழ்த்தக்கமாபுரத்தினைச்சேர்ந்தான்

 

1085    சேர்ந்துபுங்கவர்க்குரைசெய்வான்றிருந்துமோவியரு

மோர்ந்துநல்லெழிலெழுதொணாவொண்டொடிதன்னோ

டேந்துபுன்சடையிலங்கியவிறைசெயன்முறையாற்

சார்ந்துவாயினோர்சாரதர்தாந்தடைசெய்தார்

 

1086    ஈதலாதுபின்னியம்பியதிசைத்திடவற்றோ

வாதலாலின்றுபற்றிநீரங்கணனம்பொற்

பாததாமரைபணிவதுதவிர்குதிரென்னாப்

போதுகென்னலும்புங்கவர்தம்பதிபுக்கார்

 

வேறு

1087    அன்பருளந்தனதாயகோயிலாமங்கணன்மங்கையையார்வமாகவே

யின்பமணம்புணர்காதையோதுவோரின்புடனன்செவியேறவேய்குவோர்

வன்பவவெந்துயர்யாவுமாறியேமங்கலவங்கனையார்களோடுதாந்

தென்பயிலிந்திரபோகமேவியேசெஞ்சடிலன்பதமீதுசேர்குவார்

 

திருக்கலியாணச்சருக்கமுற்றியது

ஆகசெய்யுள் 1087

*****

 

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *