கந்தசஷ்டிப் பிரார்த்தனை [ 2 ம் நாள்]

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

வேதநெறி திருமுறைகள் வியந்துவிடும் முருகா
நாதனக்கே  ஆசானாய் ஆகிநின்ற முருகா
வாதமிடு குணமகல வழிசமைப்பாய் முருகா
வையகத்தார் மனஞ்சிறக்க வைத்திடுவாய் முருகா

சோலைமலை எல்லாமே கோயில்கொண்டாய் முருகா
சுவையான தமிழ்கேட்ட துள்ளிவந்தாய் முருகா
வாலைவள்ளி காதல்கொண்டு லீலைசெய்தாய் முருகா
வடிவழகா வேலவனே வரமருள்வாய் முருகா

அருணகிரி தமிழ்பாட அருளிநின்றாய் முருகா
அமுதத்தமிழ் அனைவரையும் பருகச்செய்தாய் முருகா
திருமுறைகள் வரிசையிலே அமருகின்ற வகையில்
திருப்புகழை அருளச்செய்தாய் திருக்குமாரா சரணம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *