சுவையும் சத்தும் நிறைந்த பொருள் விளங்கா உருண்டை, பல்லுக்கும் வலிமை சேர்ப்பது. இக்காலத்தில் இதைக் காண்பது அரிதாக இருக்கிறது. மரபுவழித் தின்பண்டங்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதை எப்படிச் செய்வது? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.