தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் ஆட்சிமொழிப் பயிற்சி (62ஆம் அணி), 2022 டிசம்பர் 14 அன்று சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தொடங்கியது. இதன் ஓர் அமர்வாக, ‘கணினியில் கலைச் சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.