நீலக் கண்கள் கொண்ட இந்தக் காட்டு மைனாவைக் கொடைக்கானலில் கண்டேன். என் கண்ணெதிரே சுவரிலிருந்து ஓர் இலையைப் பறித்தது. இது என்னுடையதாக்கும் என ஒரு குழந்தையைப் போல், அலகால் பற்றியபடியே இங்கும் அங்கும் சுற்றி வந்தது. கீழே போடமாட்டேன் என உறுதியுடன், இலையை வாயால் கவ்வியபடியே குரல் எழுப்பியது. அந்த அழகிய காட்சி இதோ.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.