வைரமுத்து சறுக்கிவிட்டாரா?

அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சுகுமாரி’ பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள். அப்போதுதான் கவனித்தேன். இந்த வரிகள் என்னை உறுத்தின.

காதலை மறைத்தால்
கனம் தாங்காமல்
என்னுயிர் செத்துப்போகும் இல்லையா!

காதலைச் சொல்லி
இல்லையென்று மறுத்தால்
காதலே செத்துப்போகும் இல்லையா!

காதலின் வலியைச் சொல்லும் இடத்தில், ‘செத்துப்போகும்’ என்ற வார்த்தை வந்திருக்கக் கூடாது. இது கேட்கும்போது, அமங்கலமாய் இருக்கிறது. மேலும், அந்தக் காதல் உணர்வுக்குப் பொருந்தும் வகையிலும் இல்லை. காதலி ஏற்க மறுத்தால், காதல் எப்படிச் செத்துப் போகும்? அது காதலனிடம் அப்படியே தானே இருக்கும்? வைரமுத்து இங்கே சறுக்கிவிட்டாரா?

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *