கவிதைகள்

மு. பிரபு
191/2, புதிய தெரு
ரூசா வழி
மேல்காவனூர் கிராமம் & அஞ்சல்
கே.வி. குப்பம் தாலுக்கா
வேலூர் மாவட்டம். 632 209. 

1. ஈரத்துணி

தொடர் மழை
தொடரமுடியாத
தொழிலாளர்கள் பணி,

ஈரத்துணி
அவர்கள்
தலையில் மட்டுமில்லை
வயிற்றிலும் கூட..

2. தொடர் மழை 

தேங்கி நிற்கும்
தண்ணிர்
வடியவில்லை,

வாழ்க்கைக்கு பாதையின்றி
கண்ணீர் வடிக்கும்
நடைப்பாதை வியாபாரி.

3. மழைக்காலம்

அடுப்பு பற்றவைக்க
முடியாமல்
செங்கல்
சூளைக்காரர்.

வயிற்று பசியை
அணைக்க முடியாமல்
தவிக்கும்
செங்கல் சூளை
தொழிலாளி.

4. விவசாயமுமில்லை

விலைகளும்
குறையவில்லை
நிரந்தர வேலையுமில்லை
வேலைக்கு ஏற்ற
ஊதியமுமில்லை
ஆனாலும்
மறைமுக வரிகளால்
சுமைதாங்கிகளாய்
ஏழைகள்.

5. செயலிகளில் 

வாசிக்கப்படும் புத்தகங்கள்
பாசிக்கு உணவாகும்
நூலக புத்தகங்கள்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *