மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா
நம்பிக்கை என்றால் நம்பிக்கை வேண்டும்
தும்பிக் கையானை தொழுகிறார் பலபேர்
பற்பல மதங்கள் பல்வகைத் தெய்வங்கள்
இப்புவி இருப்பதை எண்ணிட வேண்டும்
அல்லா என்கிறார் யேசு என்கின்றார்
அரியே என்கிறார் அரனே என்கிறார்
அகிலாண் டேஸ்வரி அம்பிகை என்கிறார்
நம்பிக்கை என்பது நாமமாய் பெருகுது
உண்டு என்று நம்பிக்கை வைக்கிறார்
இல்லை என்று சொல்பவர் இருக்கிறார்
உண்டா இல்லையா என்பதை நினைக்க
நம்பிக்கை எதுவெனத் தெளிந்திட வேண்டும்
பாசம் நேசம் பர்த்ததே இல்லை
அன்பு கருணை பார்த்ததே இல்லை
எல்லாம் இருக்கு என்னும் நம்பிக்கை
எல்லோர் இடத்தும் இறுக்கமாய் இருக்கு
நிறமும் இல்லை உருவும் இல்லை
கண்ணால் எவரும் கண்டதும் இல்லை
இருப்பதாய் நம்பிக்கை இறுக்கமாய் இருக்கு
விமர்சனம் வெறுப்பை வெளியிட மாட்டோம்
இவைகள் அனைத்தும் நிறைந்தது இறையே
இறையில் நம்பிக்கை தவறா சொல்வீர்
நம்பிக்கை உருவமே இறையே ஆகும்
நம்பிக்கை என்றுமே நல்லதே காட்டும்
நம்பினார் கெடுவதில்லை நம்பினார் வீழ்வதில்லை
நான்மறையும் நம்பிக்கை நல்வழியும் நம்பிக்கை
மதங்கூறும் தத்துவங்கள் மகத்தான நம்பிக்கை
மகத்தான நம்பிக்கை மாநிலத்தில் இறையாகும்!
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.