தி.சுபாஷிணி

மாயனை யமுனைத் துறைத் தலைவனை

வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து

தூயவழி அடைந்திட் டாய்நீ! எங்கள்

போய பிழைகளும் தீயினில் தூசாக

ஆயர்குலத்து உதித்தவனை விட்டு சற்றே

வாயில்வர வேண்டும்! எழுவாய் நாச்சியாரே!

 

படத்திற்கு நன்றி : http://www.srivilliputhur.com/srivilliputhur-temples/Andal%20Temple,Srivilliputhur.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "நாச்சியார் பள்ளியெழுச்சி (5)"

  1. “மாயனை வடமதுரை மைந்தனை” – ஆண்டாள் பாசுரத்தில்
    “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை” என்று
    பெற்ற தாய்க்குப் பெருமை சேர்க்கும் பிள்ளையாய் பெருமாளைப்
    பாவிக்கிறாள். ஆண்டாளுக்கு அச்சமயம் திருவள்ளுவரின்
    “ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற குறள் நினைவுக்கு
    வந்தது போலும்! பிள்ளை சான்றோனாக வளர்ந்தால் தான்
    பெற்றவளுக்குப் பெருமை, மகிழ்ச்சி எல்லாம்.. எனவே
    அக்கருத்தை இப்பாசுரத்தில் பெருமாள் மேல் ஏற்றிச்
    சொல்லுகிறாள். ஆனால், “தீக்குறளைச் சென்றோதோம்”
    என்று இன்னொரு பாசுரத்தில் சொல்லுவது புரளி பேச மாட்டோம்
    என்று சொல்லுவது தான். சிலர் இதை ‘திருக்குறளை ஓதமாட்டோம்’
    என்று விளக்கம் சொல்லும் வேடிக்கையை என்னவென்று சொல்ல!
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.