செண்பக ஜெகதீசன்
நீந்திக் கரை சேர்ந்தமைக்கு
நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது
நிலா..
முப்பது நாள் முயற்சி
முழுமை பெற்று விட்டதால்
முகத்தில் பூரிப்பு…
அழகைப் பார்த்தாலே
அக்கம் பக்கத்தில்
ஆரவாரம்தானே-
மேக உரசல்கள்,
மின்னும்
நட்சத்திர பல்லிளிப்புகள்..
நடக்கட்டும்-
நல்ல காட்சிதான் நமக்கு…!
படத்திற்கு நன்றி: http://www.123rf.com/photo_2286955_full-moon-among-stars.html
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
கவிஞருக்கு நல்ல காட்சி! படிப்பவருக்கு நல்ல கவிதை. கவிதை உலகில் நிலா எப்போதும் அட்சய பாத்திரம்தான்!