நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (7)
தி.சுபாஷிணி
நின்ற குன்றினை நெடுமால் எனக்கூவி
நனந்தலை வாழ்விக்கும் நாராயணனிடம் நீ
கொண்ட மயக்கம் இன்னும் தீரலியோ!
கொண்டால் கண்ணனையே கணவன் என்றவளே!
கொண்டலிடைக் கேட்கும் பேச்சரவம் கேட்டிலையோ!
கண்டு இரங்காயோ! எழுவாய் நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://indiatempletour.blogspot.com/2011/07/pictorical-description-of-sri-andals.html