இயற்கைத் தாலாட்டு
செண்பக ஜெகதீசன்
பட்டாம்பூச்சி..
ஈரமான இறகுடன்
எங்கே பறப்பது-
ஏங்கித் தவித்தது..
ஈரமான இதயத்துடன்
எட்டிப் பார்த்தது
காலைக் கதிரவன்..
கதிர்க் கரங்களால் தடவிட
காய்ந்து போனது
ஈரம்..
பாய்ந்து போனது
பட்டாம்பூச்சி…!
ஓ,
இதுதான்
இயற்கைத் தாலாட்டோ…!
படத்திற்கு நன்றி: http://www.saratoga.com/horse-racing-blog/2009/08/mares-musings-butterflies-racehorses-and-chinese-typhoons.html