முந்திரிக் கொட்டை
பாகம்பிரியாள்
நமக்குள் முகிழ்த்த காதலை,
மூன்றாம் பேருக்குத் தெரியாமல்,
மறைக்க வேண்டும் என்ற தவிப்பில்
முன்னூறு வழிகளை நாம் தேட,
முளை விட்ட நினைவுகள்,
பிறர் கண் பட்டதாலும்
நம் கை பட்டதாலும்
முதிர்ந்து போய்
முந்திரிக் கொட்டை போல்,
முன்னால் காதலைக் காட்டிக்கொடுத்த பின்,
மெல்ல உதிர்கின்றன கவிதைச் சருகுகளாய்,
மேலும் நம் காதலுக்கு உரமாகி வலுவேற்ற!
படத்திற்கு நன்றி:http://www.orkutlover.com/2009/09/love-romance-orkut-scraps.html
கண்டுபிடிக்கப்பட்டால்தானே அது
காதலெனக் கண்டுகொள்ளப்படுகிறது..
உதிரட்டும் கவிதைச்சருகுகள்
உரமாக.. நன்றாய்…!
-செண்பக ஜெகதீசன்…