செண்பக ஜெகதீசன்

வான வீதியில்
வண்ணக் கோலமிட
விண்மீன் புள்ளியிட்ட
வெண்ணிலாப் பெண் மகளின்
மேனி எழில் கண்டு,
மோகம் தலைக்கேறிச் சுற்றி வந்தன
மேகக் கூட்டங்கள்..

போதும் கோலமெனப்
பாதியில் போட்டு விட்டுப்
போய் விட்டாள்
பாவையவள்..

கண் விழித்துப் புள்ளிகள்
காத்திருக்கின்றன..

வருமா அவை
கோலமாகும் காலம்…!

 

படத்திற்கு நன்றி:http://writingcreativenonfiction.wordpress.com/2011/06/09/poem-star-gazing

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *