வையவன்

மீன்
கடலில்
நதியில்
குளத்தில்
கிணறில்
நீர்த் தொட்டியில்
குழம்பில்
அவள்
கண்ணில்

மான்
வனத்தில்
சில
ஆலயங்களில்
சில
சோலைகளில்
அவள்
நடையில்
துள்ளும்
என்
மனத்தில்
தேன்
கூடுகளில்
புட்டிகளில்
அவள் பேச்சில்
இதழில்
நாவில்
மொழியில்.

நான்
என்னில்
முன்னும்
பின்னுமாடும்
நினைவின்
ஊஞ்சலில்

வான்
பேரண்டக் கிண்ணத்தில்
எல்லாச் சுருக்கங்களும்
பிரிந்து விரிந்த
என்னுள்.

படத்திற்கு நன்றி

http://www.clipartof.com/portfolio/fam13dei/illustration/surreal-cat-under-a-night-sky-and-eyes-1068864.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *