செண்பக ஜெகதீசன்
பாலைவனத்தில் ஒட்டகமும்,
பரந்த கடலில்
பாய்மரக் கப்பலும்
படைத்தவனின் படைப்பைப்
பயணித்துக் கடந்திடத்தான்..
ஆனாலும் அவை
பாலைவனப் புயலிலும்
சுனாமி அலையிலும்
சிக்கிச்
சீரழியும்போதுதான் தெரிகிறது
படைத்தவனின் இருப்பிடம்…!
படத்திற்கு நன்றி:http://www.israelshamir.net/English/Tsunami.htm
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…