தேதி குறிக்கப்பட்ட வனம்!
வெடிமருந்துத் தொழிற் சாலையின்
தளம் போட வந்த பாட்டாளிகள்
காலைக் கஞ்சி காய்ச்சும்
புகை மணம் வருகிறது
தேதி குறிக்கப்பட்ட வனம் இது
அவளோடு நான் குலவிக்குலவி
காதலோடு அவள் பெயரையும்
செதுக்கிய மரத்தில்
கனி குலுங்குகிறது
இந்த ஈற்றில்
நேற்று தேங்கிய மழை நீரில்
படிந்த நிலா பிம்பத்தின்
சித்திரம் கலைக்கிறது காற்று
பிரிவாற்றாமையால்
மரத்தைக் கட்டித் தழுவி நிற்கும்
என் கைகளைப் பிரிக்க விடாமல்
நினைவோலம் போல்
இரைகிறது சில்வண்டு
நேரமாவதை நினைவூட்டுகின்றன
நட்சத்திரங்கள்
விடிந்தால் துவங்கும் வெட்டுக்கூலி.
படத்திற்கு நன்றி
http://www.art.com/products/p14353607-sa-i2969719/close-up-of-an-axe-cutting-into-a-log-against-a-blue-sky.htm
அருமையான கவிதை. கடைசியில் அது என்ன வெட்டுக்கூலி? புரியவில்லையே..