வருணன் 

 

போர்முரசாய் எக்காளமிட்டு
இடி இடிக்குமென் மெல்லிதயத்தில்

நாசிகள் புடைக்க அதரம் துடிக்க
வெளிவரும் சூறைக்காற்று

வான் விழிகளின் ஓரங்களில் துளிர்க்கும்
பெருமழையின் துவக்கமாய் சிறு தூரல்
கணங்கள் கரைய வெடித்துச் சிதறும்

அருவியினூடே தீற்றலடிக்கும்
சிவப்பு மின்னல்கள் கிளைகள் பிரிந்து

அடைமழையொன்று என்
கன்ன நிலங்களையும் மீசை வயல்களையும்
தாண்டி கழுத்துப் பள்ளத்தாக்கில்
கரணம் அடிக்கும்…

மழை ஓய நேரமாகலாம்.

புகைப்படத்துக்கு நன்றி: 

http://2.bp.blogspot.com/_gi72iYPEEFM/TAQTrVHOMuI/AAAAAAAAAzo/6N_WBcM5As4/s1600/tears4.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *