பத்மநாபபுரம் அரவிந்தன் 
 
போதையென்பது வஸ்துக்களிலல்ல 
அது.. மனம் சார்ந்த நிலமைகளின்
வலிமைகளைப் பின்பற்றி 
மூளையைக் கிறக்குவது…
 
மனச் சோர்வின் போது 
ஒரு மிடறு போதும் … தலைக்கேறித் தாவும் 
மகிழ்ச்சியின் உச்சத்தில் கோப்பைகள் பல 
உள்ளிறங்கிப் போனாலும் 
தாளம் தப்பித் தள்ளாடாது…
 
உதடுக்கும் மதுக் கோப்பைக்குமிடையே   
மெல்லிய நூலிழையால் இணைந்து கிடக்கிறது 
போதைக் காற்றாடி …
இருப்பதா பறப்பதாவென்பது 
மனக் காற்றின் வேகத்தைப் பொறுத்தது…. 

 படத்துக்கு நன்றி

 

http://www.123rf.com/photo_7789782_3d-rendering-of-a-wine-glass.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மனப் போதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *