தடயமின்றி

வருணன்
ஊடலால் பிரியத்துடிக்கிற
தம்பதியராய் தண்டவாளங்கள் அருகருகே

கிடைத்த உலோகத் துண்டை
காந்தமாக்கும் ஆர்வத்தில் சேரிச் சிறுவன்

ஒற்றை தண்டவாளத்தில்
நாற்காலியிலமரும் முதலாளியாய்
அமர்கிறது உலோகத் துண்டு
காலடியில் எடுபிடி போல் சிறுவனின்
ஆவலையும் காத்திருப்பையும்
அருகருகே அமர்த்திக் கொண்டு

தூரத்துச் சீழ்க்கையொலியில்
பரபரக்கும் பிஞ்சு மனதின் ஏக்கமறியாது
அனைத்தின் மீதும் ஏறியிறங்கிக்
கடக்கிறது ஓர் புகைவண்டி.

 படத்திற்கு நன்றி    

http://shankarpur.co.in/shankarpur_bus_train
Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *