இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்….!!
ராஜேஸ்வரி ஜெகமணி
ஆங்கில ஆண்டின் முதல் நாள் இது ..

ஆனந்தமாய் வாழ்த்தும் பொன்னாள் இது..
வெற்றி நம்மைத்தேடி வரும் நன்னாள் இது ..
எண்ணப்படி வாழ்வு தரும் இந்நாளில்
இன்று போல் என்றும் வாழ புத்தாண்டு வாழ்த்துகள்….
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல்வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;
கனவு மெய்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்;
என்று பொன் எழிலாய் பூத்திருக்கும் புத்தாண்டில் பிரார்த்திப்போம் …
துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட புத்தாண்டினை வரவேற்போம் …
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
இனிய நாளை இன்னிசையோடும் இன்பத்தோடும் , இனிப்போடும் கொண்டாடி மகிழ இனிய வாழ்த்துகள்….
