பொன் ராம்

 

கலைமகளே! பாராயோ!

பணவாசம் வேண்டி

பக்குவமாகச் சிரித்திடும் பகட்டு உலகில்

பெண்ணுரிமையும் உளதோ!

உலகை மறந்த சுதந்திர தேவி சிலையின் வாசம்

அடி நெஞ்சில் இனித்திடும் அதிசயம் கேளாயோ?

உடன்பிறந்தார் நினைவின்றி சுகபோகம்

யாவையுமே நித்திய வாழ்வின் பொருளாய்

ஊணுக்காக உற்றதுணையின் கைப்பிடியில்

உழலுவதைப் பாராயோ!

மண்ணுக்குள்ளே நல்லறிவைக் கொடுத்த மாதா

மண்ணுக்குள் மக்கும்போதாவது வருவாரோ?!

தாத்தா வைத்த தென்னையுமே

தாகம் தீர்த்திட வந்ததே!

தாகம் உலர்ந்த உதட்டிற்கு

தண்ணீர் தரவே ஆளில்லை!

பச்சை ஓலை போடுகையிலே

பரிதவிக்கும் நடிப்பைக் காண

கலைமகளே வாராயோ!

பாசப்பனியினை விலக்கிய

பரிதியும் சோகத்தில்

மேகத்தாயின் மடியினிலே

வெட்கப்பட்டு மறைந்திடுதே!

இதயம் ஒன்று இருப்பதையே

மறந்த நெஞ்சங்களுக்கு

கலைமகளே என்ன வரமளிப்பாய்?

படத்துக்கு நன்றி: https://www.vallamai.com/wp-content/uploads/2013/02/sad-woman-silhouette-225×300.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *