-வருணன்

 

விசித்திரமானதென் வீடு
வாசல்களற்றது
மேற்கூரையில் சன்னல்கள்

பகலில் இருளும் இரவில் ஒளிரும்
அதன் அறைகள்
தமக்குள்ளே உரையாடும்
மௌனத்தில்

வழிந்து கொண்டேயிருக்கும்
இசையில்லாத பாடலொன்றும்
வார்த்தைகளில்லா கவிதையொன்றும்

முன்னோக்கி மட்டுமே
நகர வேண்டிய நிர்ப்பந்தம் துறந்த
நாட்காட்டி

வீட்டிற்கு வெளியே
இருந்து கொண்டேயிருக்கிறது
எல்லையில்லா வேலியொன்று
இன்னமும்

விசித்திரமானதென் வீடு
என்னைப் போலவே
என் அகத்தைப் போலவே.

 

படத்துக்கு நன்றி: http://blog.michaelmartinho.com/architecture/upside-down-house-in-szymbark-poland/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *