பெண்மை !!!

 

பி.தமிழ்முகில் நீலமேகம்

 

மகளிர் தினம் அன்னையர் தினம் என்று

சொற்ப நாட்கள் மட்டும்

கொண்டாடப் படவேண்டியதல்ல

பெண்மை !!!

என்றென்றும் மனதில்

மரியாதைக்குரிய ஒன்றாய்

ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே

பெண்மை !!!

அன்னையாய் சகோதரியாய்

மனைவியாய் தோழியாய்

எத்துனையோ பரிணாமங்களில்

பெண்மை !!!

நாம் வாழும் வாழ்வு

பெண்மையன்றி முழுமையடைந்திடுமோ ??

நம்மை உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்

பெண்ணன்றோ ??

பெண்மையை போற்றி

வணங்க வேண்டாம் ……

அவர்தம் உள்ளம் தனை

புரிந்து கொண்டாலே போதும் !!!

அதிகாரம் செலுத்துவதாய்

எண்ண வேண்டாம் ……

அவர்தம் ஆதரவை

உணர்ந்தாலே போதும் !!!

பெண்மையின் அழகில்

உலகமே விளங்கிடும்

என்றென்றும்

புதுப் பொலிவுடன் !!!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *