இது என்ன..!!
ராம்சி
நான் தமிழில்
முதலில் எழுதிப் படித்தது
உனது பெயரோ…
காரணம்
அதைத்தான் நான் அதிகம்
உச்சரித்து இருக்கிறேன்…
இப்போதெல்லாம் நான்
டூயட் பாடலை முணுமுணுக்கும் போது
கதாநாயகி முகத்தைப் பின்தள்ளி
என் சிந்தனையை ஆக்கிரமிப்பது உன் முகம்தான்…..
அந்தோணி.. ஆனந்தி காதலித்த போது
முதலில் எதிர்த்தது நான்தான்…
உன்னைப் பார்த்த பின்புதான்
யோசிக்கிறேன்
ஏன் அவ்வாறு செய்தேன் என்று….
அழைப்பு வராவிட்டாலும்
அடிக்கடி அலைபேசியைப்
பார்த்து நகர்கிறது..
நீ இல்லாத அந்தப் பொழுது…
உனக்கு நான் தவறாய் அனுப்பிய
ஈமெயில் பற்றி நீ பேசுவாய் என்று இருந்தேன்.
ஆனால் அவையும் வீண்தான்..
என் மௌனம் பற்றி நீ கேட்பாய்
என்று..
மௌனத்தில் தொடங்கிய
நமது பல சந்திப்புகள்
மௌனத்திலே முடிந்தன…
உன்னிடம் பேச நான் ஏற்படுத்திய
காரணங்களே சொல்லும்.. என் மனத்தை
அப்படியும் உனக்குப் புரியவில்லையா?
காத்திரு பிப்ரவரி பதினான்கு வரை…
Very nice one .
Good one.. I’ve read many more of your lovely poetry..wishing you good luck for it to get published soon…Congratulations!!