அரசியல் கொக்குகள்
-வே.ம.அருச்சுணன் – மலேசியா
அழகிய நாடு
அற்புத வளங்கள்
கல்வி குறைவென்றாலும்
அறிவான மக்கள்
பேதம் அறியா
அன்பு தெய்வங்கள்
மாறா குணங்கள்
அமைதியான வாழ்க்கை
பொது நலம்
கடந்து நூற்றாண்டில்……!
புதிய மனிதர்கள்
விநோத சிந்தனைகள்
சுய கௌரவம்
பொது வாழ்வில்
சுரங்கம் அமைத்து
நாட்டை மறந்து
வீட்டை வளர்க்க
சித்து விளையாட்டு
சுயநலம்
இந்த நூற்றாண்டில்……!
மகாத்மாக்கள்
சென்ற நூற்றாண்டு முதலே
பயணித்துவிட்டார்கள்……!
இன்று,
அரசியல் வானில்
அநீதிகளுக்கு மகுடம்
அறப்போர்
ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது
அடாவடிகள்
தலையெடுப்பால்
நதிகள் நாசமாயின
நீர்வாழ் அழிந்தன…….!
பொய்யான
அரசியல் சுனாமியால்
மக்கள் சிரச்சேதம்
கூடி வாழ்ந்த மூவினம்
மண்ணாகியது
வம்பும் வழக்கும்
தொடராகின…..!
நாட்டின் அமைதி
அவர்கள் விரும்பாதது
கலங்கி குட்டையில்
மீன் பிடிக்கும்
அரசியல் கொக்குகள்……!
மக்களை
மாக்களாக்கும்
அரசியலாரிடம் எச்சரிக்கை
துஸ்டனைக் கண்டால் தூரவிலகு
பெரியோர் சொன்னது தப்பாகா……!
நாட்டு நலம்
முன்னெடுத்து
சபதம் எடுத்திடு
மக்கள்
அரசியலாரிடமிருந்து
நாட்டைக் காக்திடு……!
நாடு
இடுகாடாய் மாறு முன்னே
சுதந்திரத்தைக் காத்திடு
சிம்மாசனத்தில் அமர்ந்து
எக்காளமிடும் அரசியலார்
திமிரினை அடியோடு
வீழ்த்திடுவீர்……!
நாட்டைக் காக்கும்
வீரத்திருமகனே
நாளைய பொழுது
நலமாய் இருக்கட்டும்
வெற்றிமுரசு வேகமாய் ஒலிக்கட்டும்………!