கோபுர பொம்மையாய்…

செண்பக ஜெகதீசன்

 கிடைத்திருக்கும் உயர்ந்த இடம்,

கோபுர பொம்மைக்குக்

கொண்டுவந்துவிடுகிறது கர்வத்தை-

கோபுரத்தையே தாங்குவதாய்..

 

கவலைப்படுவதில்லை கோபுரம்,

உண்மை அதற்குத் தெரிவதால்..

 

இதுதான் கதை மனிதனிடமும்-

அவனுக்குக் கர்வம்

அதிகமாகும்போது சிரிக்கிறான்

ஆண்டவன்…!

படத்துக்கு நன்றி

   http://www.elanguages.org/20283

Share

Comments

4 responses to “கோபுர பொம்மையாய்…”

  1. தனுசு

    ஒரு வரி தத்துவம் என்பார்களே அதுபோல் சின்னதாய் ஒன்று.

    //அவனுக்குக் கர்வம்
    அதிகமாகும்போது சிரிக்கிறான்
    ஆண்டவன்…!////

    தனக்கு கிடைப்பது மரியாதை என்பதை புரியாமல் தன்னைக்கண்டு பயப்படுகிறார்கள் என புரிந்துகொள்கிறான். விளைவு கர்வம். அப்போது தான் ஆண்டவன் சிரிக்கிறான்.

  2. -செண்பக ஜெகதீசன்…

    தனுசு அவர்களின் கருத்துரைக்கு
    மிக்க நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

  3. கருத்தாழம் மிக்க அருமையானதொரு கவிதை.  தன்னை ஆட்டுவிப்பது இறைவனென்று புரியாமல், அனைத்துக் காரியங்களையும் தான் செய்வதாகவும், தன் விருப்பப்படி நடப்பதாகவும் எண்ணுவது எவ்வளவு பெரிய அறியாமை!!!. பகிர்விற்கு மிக்க நன்றி.

  4. -செண்பக ஜெகதீசன்…

    பார்வதி இராமச்சந்திரன் அவர்களின்
    பகிர்வுக்கும் கருத்துரைக்கும்
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *