உடலே ஒரு தேர்

 

விசாலம்

 

நம் உடலே ஒரு தேர் ,
நடுவிலே இறைவன் ,
தேர் இழுப்பது போல்,
நமக்கு ஆசாபாசங்கள்,
தேர்த்திருவிழாவில் கொண்டாட்டம்
வாழ்க்கையிலும் ஆடும் ஆட்டம்
இசை,நடனத்துடன் தேர் பவனி
திருமணத்துடன் கார் பவனி
வாழ்க்கை மகிழும் தருணம்
இன்ப உச்சித்தொடும் தருணம்
நாலு வீதிகளில் தேரின் வலம்
நாலு பகுதி வாழ்க்கையில் வலம்
முடிவில் இறைவன் ஆலய நுழைவு ,
நிலையாத உடலின் அழிவு
ஆன்மா வந்த இடத்தில் சேர்வு ,
போனது நம்மைத்தொடர்ந்த சோர்வு

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *