பச்சை விளக்கு
முனைவர். ப. பானுமதி
சாயம் போன
கறுப்பு வெள்ளைக் கனவுகளைக்
கண்டுகொண்டிருக்கின்றன
அவள் சிவப்பு விழிகள்
கடிகாரத்தின்
அப்போது முடுக்கிய
பெண்டுலமாய்
அங்குமிங்கும் அலைகிறது
ஒவ்வொரு
வாகனத்தின் மீதும்
பஞ்சு படர்ந்த
அவள் பார்வை
குழந்தையின்
அனைப்பில் இருக்கும்
மரப்பாச்சியைப் போல
அவள் கையில்
உயிர் நிரப்பிய
குழந்தை
இலையுதிர்க் காலத்து
சருகளைப் போல்
பட்டுப்போன
அம்மா, அய்யா, அக்காக்களை
உதிர்க்கிறது
அந்த மனித மரத்தின்
உலர்ந்த இதழ்கள்
அருவருப்புப் பார்வைகளைத்
தாண்டி
‘சில்லைறை இல்லம்மா
போ போ’
என்னும்
விரட்டியடிப்புகளைக்
கடந்து
தட்டின் சில்லறை ஓசை
காதில் விழுவதற்குள்
விழுந்து விடுகிறது
பச்சை விளக்கு
சிக்னலில்
பச்சை விளக்கு பச்சையாய் உரித்து காட்டியது பஞ்சைகளின் நிலமையையும் பசுமையாய் இருப்பவர்களின் மனதையும் நல்ல கவிதை பாராட்டுக்கள்.
கவிஞர் காட்டும்
பச்சை விளக்கில் தெரிகிறது
சமுதாய விளக்கின் சிவப்பு-
அவலம்…!
நன்று…!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!. மனதைச் சுடுவது கவிதை வரிகள் மட்டுமல்ல, அது காட்டும் சமூக அவல நிலையும். பிஞ்சுகள் பிறந்த உடனேயே பிச்சை எடுக்க காட்சிப் பொருளாகும் இந்த நிலை என்று மாறுமோ!!. அருமையான கவிதை பகிர்விற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி தனுசு அவர்களே
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி செண்பக ஜெகதீசன் அவர்களே
நெஞ்சு பொறுக்காத அவலங்களே கையற்று எழுத்தில். கருத்துக்கு நன்றி பார்வதி இராமச்சந்திரன்
சமூகத்தின் அவல நிலையையும், மக்களின் மனநிலையையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் தோழி. வாழ்த்துகள்.
மிக்க நன்றி பி.தமிழ்முகில் நீலமேகம்