அங்ஙனம் தெய்வங்களை எல்லாம் வேண்டியவள்
பாசண்டச் சாத்தன் கோயிலை இறுதியில் அடைந்தனள் .
குழந்தை உயிர் மீண்டும் பெற வேண்டி நின்றனள்.
அப்போது,
பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்கு
அழகான ஒரு பெண்ணாய்
அவள் முன் தோன்றினள்
சுடுகாட்டுப் பிணங்களை உண்ணும்
இடாகினிப் பேய்.
மாலதியிடம் இடாகினிப்பேய் பேசினள்;
குற்றமற்றவளே!
தவம் செய்தவர்க்கே தேவர்
நேரில் வந்து வரம் கொடுப்பர்.
உன் போன்றோர் முன்
ஒருபோதும் வரமாட்டார்.
இது பொய்யான வார்த்தை இல்லை;
உண்மையே!
உன் கையிலுள்ள இளங்குழந்தையைப்
பார்த்துவிட்டுத் தருகிறேன்.
என்றே கூறி அக்குழந்தையை வாங்கிக் கொண்டு
கரிய இருள் சூழ்ந்த சுடுகாட்டினுள் சென்று
அப்பிணத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டனள் இடாகினிப்பேய்.
சாத்தன் மகவாய் வருதல்
துயருற்ற மாலதி
இடியோசை கேட்டுப் பதறி அகவும்
மயில் போலவே அழுதனள்.
அழுத அவள்மேல் இரக்கம்கொண்ட
பாசண்டச் சாத்தன்,
அம்மையே! அழவேண்டாம்.
நீ திரும்பிச் செல்லும் வழியில்
ஒரு மரத்தின் நிழலில்
இறந்த அக்குழந்தையை
உயிருடன் காண்பாய் எனகூறித்
தானே அக்குழந்தையாய் மாறி
குயில் பாடும் சோலையில்
ஒரு மரத்தடியில் கிடந்தான்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 28
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html


Leave a Reply