சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி – 9

0

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். சைவ சமயம் வலியுறுத்தும் கருத்து இது. இக்கருத்தையே இக்கால அறிவியல் அறிஞர்
Neil DeGrasse Tyson ““We are part of this universe; we are in this universe, but perhaps more important than both of those facts, is that the universe is in us,” என்கிறார்.(Neil DeGrasse Tyson is the director of the Hayden Planetarium at the American Museum of Natural History and host of NOVA scienceNOW.) இந்த அறிவியல் உண்யையை அக்காலத்திலேயே உணர்த்தியது சைவ சமயமே!

நமக்குள்ளே இருக்கும் அண்டம்தான் உடல் என்ற பிண்டம். இது வரை இப்பிண்டம் பற்றித் திருமூலர் கூறிய செய்திகளைத் தற்கால அறிவியல்கள் உறுதி செய்வதைக் கண்டோம். இந்தப் பிண்டத்துக்கு வெளியே இருப்பது அண்டம். இது பற்றி மணிவாசகப் பெருமான் உரைப்பதை இனிப் பார்ப்போம். இவரைப் பற்றிய சிறு குறிப்பு ஏற்கனவே இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் இயற்றிய திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் அண்டம் பற்றிய தன் கருத்துகளைப் பொதிந்து வைத்துள்ளார் :

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின். “.

இதன் பொருள் :

பிரமாண்டம் எண்ணற்ற கோள்களையுடையது. அக்கோள்களின் தன்மைகளை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடியாது.அவற்றின் அழகும் சீரமைப்பும் கண்டு வியப்பதற்கும் ஆராயுமளவிற்கும் உரியவையாய் இருக்கின்றன.ஒவ்வொரு கோளிலும் தனியழகு சிறக்கிறது. விளக்கிச் சொன்னால் கோடிக் கணக்கில் அவை விரிகின்றன.ஓர் ஓட்டையின் வழியாக வீட்டுக்குள் வருகின்ற சூரிய வெளிச்சத்தில் அணுப்போன்ற தூசிகள் அலைந்து திரிவது காணப்படுகிறது. அது போன்று கோள்கள் வானில் மிதந்து கொண்டிருக்கின்றன. அளவில், சிறிய அணுவுக்கும், பெரிய அண்டத்திற்கும் அமைப்பு ஒன்றேயாகும்.ஆராய்ந்து பார்ப்பவர்க்கு இவ்வுண்மை விளங்குகிறது…என விளக்கம் தருவர் சைவ சமயப் பெரியோர்.

இனிச் சொல்லுக்குச் சொல் பொருள், உட்பொருள் காண்போம்:

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் “

அண்டம் என்பது முட்டையைக் குறிக்கும். முட்டையின் வடிவம் நீள்கோளம் (ellipse) ஆகும் . எனவே அண்டம் பேரண்டம்’ universe’ என்றெல்லாம் அழைக்கப்படும் அது நீள் கோள வடிவு உடையது என்பதற்காகத்தான் ‘அண்டம்’ என மாணிக்கவாசகர் அழைத்தார் (அல்லது அவருக்கு முன்பிருந்தோர் அழைத்தனர் ) .

அண்மைக்கால விண்வெளி ஆய்வு அறிஞர்கள் (astrophysicists) இதே கருத்தை இப்போது வெளியிட்டு உள்ளனர். 2001 -இல் NASA அனுப்பிய Wilkinson Microwave Anisotropy Probe (WMAP). என்னும் விண் வெளிக்கலம் ஒன்பது ஆண்டுகளாக விண்வெளியைச் சுற்றி வந்து பல கோடி அரிய தகவல்களை அனுப்பிவைத்தது. அவற்றை அலசி ஆய்ந்த இத்தாலி நாட்டு அறிஞர்கள் அண்டம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து உள்ளனர்.

– அண்டத்தின் வயது 13.75 பில்லியன் ஆண்டுகளாம்

(http://wikipedia.orange.fr/wiki/Wilkinson_Microwave_Anisotropy_Probe). ;
– 4 % அளவில்தான் அண்டத்தில் ‘பொருள்’ (matter) சிதறிக் கிடக்கிறதாம் ;
– 22 % கரும் பொருளாம்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் வெளியிட்ட கருத்து :
மிகச் சரியான கோள வடிவில் அமையாமல் அண்டம் சற்றே (நீள் வட்ட) மாத்திரை போல அமைந்துள்ளது என்பதே. முட்டை வடிவமே அண்டத்துக்குப் பொருத்தம் என இத்தாலி பெரேரா பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆய்வு அறிஞர்கள் லெயோனார்டொ காம்பனெல்லி பாரி பல்கலைக்கழக ஆய்வு அறிஞர்கள் பவோலா செயா, லுய்ழி டெடெஸ்கோ முதலியோர் கருதுகின்றனர்.

(Instead of being perfectly round like a globe, the universe might be a bit stretched in shape like a pill. Now astrophysicist Leonardo Campanelli of the University of Ferrara and his colleagues Paolo Cea and Luigi Tedesco at the University of Bari, all in Italy, have found that a universe shaped a bit like an oval can explain this so-called “quadrupole anomaly.”http://www.space.com/2988-bursting-spherical-bubble-universe-pill-shaped.html http://www.nbcnews.com/id/15197712/ns/technology_and_science-space/t/universe-might-be-oval-shaped/#.Umj8iRAlTrY
எனவே, மாணிக்கவாசகர் பயன்படுத்திய ‘அண்டம்’ என்ற சொல்’ universe’ என்னும் சொல்லுக்குப் பொருத்தமாகவே உள்ளது.

அடுத்த சொல் : பகுதி. அண்டத்தின் பகுதி எனக் குறிப்பிடும் மாணிக்கவாசகரின் கருத்தில் பகுதி என்ற சொல்லைப் பன்மையாகக் கொண்டால், அறிவியல் பொருள் அதில் புதைந்து இருப்பதை உணரலாம். (பண்டைக் காலத்தில் ‘கள் ‘ விகுதி அதிகம் பயன்படுத்தப்படவில்லை ; ஒருமையே பன்மைக்கும் வரும் ). ஆகவே அண்டத்தில் பல பகுதிகள் உண்டு என்ற பொருள் தொக்கி நிற்கிறது. இக்கால அண்ட ஆய்வறிஞர்கள் (cosmologists) அண்டத்தில் நான்கு பகுதிகள் உண்டு என்கிறார்கள். அவை காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும்சக்திகள், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி. (காண்க :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D).

அதனைத் தொடர்ந்து வரும் சொல் ‘உண்டை’. உண்டை உருண்டை இரண்டும் ஒரு பொருள் குறித்த இரு சொற்கள் உருள்வது உருளை ; வட்டம்தான் உருளும் எனவே உண்டை என்பதன் வடிவம் வட்டம் அதாவது கோள வடிவம். அண்டப் பகுதியில் உள்ளவை யாவும் கோள வடிவின. நம் உலகமும் அண்டத்தில் உள்ள பகுதிதானே. ஆகவே நம் உலகமும் கோள வடிவிலேயே உள்ளது என்பது பெறப்படும்.இந்த உண்மையை எட்டாம் நூற்றாண்டு மணிவாசகப் பெருமான் வரிகள் எடுத்துரைக்கின்றன. உலகம் தட்டையானது என்றே மக்கள் கருதி வந்த மிக முற் காலத்திலேயே உலகம் உருண்டை என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் தமிழர். புறநானூறு 17 -ஆம் பாடலில் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை

“இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழிக் காவல” என விளிக்கிறார் குறுங்கோழியூர்க் கிழார்.

கோள்கள் வடிவத்தால் உருண்டையானது என்பதை இப் புறநானூற்றுப்பாடல் உணர்த்துகிறது. இந்த உண்மையை மேனாட்டார்க்கு உணர்த்த கலிலேயோ கலிலேயி (கி.பி. 1564-1642) வரவேண்டி இருந்தது. மேலும் கதிரோனைச் சுற்றியே கோள்கள் சுற்றுகின்றன என்ற உண்மையும் தமிழர்களுக்குத் தெரிந்து இருந்தது.

“வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு” எனச் சிறுபாணாற்றுப்படை (242-243) கூறுகிறது காண்க.

மாணிக்கவாசகரின் இந்தப் பாடலின் நான்காம் சீர் ‘பிறக்கம்’ . இச்சொலுக்குப் பொருள் என்ன? ‘ஒளி ‘ என்றொரு பொருள் உண்டு. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பதினொன்றாந் திருமுறை யில் இடம் பெறுவது. அருளிச் செய்தவர் பட்டினத்து அடிகள். இந் நூலில் 992 ஆம் பாடலில்

“மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே
மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே”

என்று பாடுகிறார்.இங்கே மின்னலின் ஒளி என்னும் பொருள் தருகிறது ‘பிறக்கம்’ என்ற சொல். ஒளி என்னும் பொருளில் இச்இசால்லைப் பயன்படுத்தும் கம்பர்

“மணியால் ஓங்கல்
பிறக்கம் உற்ற மலை நாடு” என்று பாடுவார் :
காண்க : கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலம்
(பாடல் 30 வை மு கோ பதிப்பு)

பிறக்கம் என்பதற்குப் பெருக்கம்,பெரு(க்)குதல் என்றும் பொருள் உண்டு. இதனை “மரகதம் குவால் மாமணி பிறக்கம்” – (திருவண்டப் பகுதி). இதன் பொருள் :பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், இப் பொருளில் கம்பரும் ,
” வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின” எனச் சுந்தர காண்டம் சூளாமணிப் படலம் 58 ஆம் பாடலில் பாடினார்.

பிறக்கம் என்ற சொல்லுக்குக் குவியல் என்னும் பொருளும் உண்டு என்கிறது வலைத் தமிழ். (http://www.valaitamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D–tamil-dictionary109230.html). அது மட்டும் அன்று ; brightness , heap , splendour பிரகாசித்தல் ஒளிப்பிறக்கம் இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி.என்றெல்லாம் பொருள் கொள்ளலாம் என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது.

(http://glosbe.com/ta/en/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

http://www.tamillexicon.com/?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&option=glossary&act=findout)

இவற்றைத் தொகுத்துச் சொன்னால், ஒளி, பெருக்கம், குவியல், மாட்சிமை (splendour)…என்று பொருள் தரும் சொல்தான் ‘பிறக்கம்’ என்னும் சொல் என்பது தெளிவு. இத் தெளிவுடன் அண்டப் பகுதி உண்டைப் பிறக்கம் என்னும் சொற்றோடரைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

அண்டத்தில் உள்ளவை கோள வடிவை உடையவை ; ஒளி தருபவை / பெறுபவை/விடுபவை , குவியலாக இருப்பவை, காட்சிக்கு மாட்சிமையுடன் விளங்குபவை…அண்டம் இப்படி இருப்பதாகத்தான் இக்கால அண்டவியல் உரைக்கிறது. அண்டப் பகுதியில் குவியலாக, தொகுதியாக உள்ளவற்றை ‘galaxy clusters’ என்பர். (காண்க : http://en.wikipedia.or/wiki/List_of_galaxy_clusters). இவற்றைத் தானே மாணிக்கவாசகரும் ‘”அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் ” எனப் பாடுகிறார்.

அண்டத்தின் இன்னொரு தன்மையை அடுத்த வரியில் அவர் வெளிப்படுத்துவதைப் பாருங்கள் : “அளப்பருந் தன்மை”. அளக்க இயலாத தன்மையை உடையதாம் அண்டம். வலிமை வாய்ந்த தொலை நோக்கிகள், நவீன விண்வெளிக் கலங்கள், நெடுந்தொலைவு பாயக் கூடிய உந்தூர்திகள் (rockets) …என நாலு கால் பாய்ச்சலில் அறிவியல் முன்னேறி வந்தாலும், அண்டத்தின் அகல(ம்) நீள(ம்) ஆழங்களையோ காலத்தையோ இன்னும் துல்லியமாக் கணிக்க முடியவில்லையே! அதனால்தான் போலும் மாணிக்கவாசகர், ‘அளக்க முடியாத அண்டம்’ என விளக்குகிறார். நம் நாட்டு ஞானி மாணிக்கவாசகரின் இக்கருத்துக்கு அரண் அமைக்கிறார் அமெரிக்க அரசியல்வாதி ரிச்சர்ட் ஹெச் பேக்கர் :”For most people, we often marvel at the beauty of a sunrise or the magnificence of a full moon, but it is impossible to fathom the magnitude of the universe that surrounds us.” புகழ் பெற்ற எழுத்தாளரும் பெரும் பேச்சாளரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான இன்னோர் அமெரிக்கர் கர்ட் கோப் (Kurt Kobb ) கூறுகிறார் :

“The one thing we know for certain about the universe is that it is unfathomable. …. No matter how many narratives we construct, literary, historical, scientific or religious, the universe will remain unfathomable.” அளப்பரியது என்னும் பொருளைத் தரும் ‘ ‘unfathomable’ என்னும் சொல்லையே பெய்கிறார்கள்!, மாணிக்கவாசகரைப் போலவே! அமெரிக்கக் கவிஞரும் மெய்ப்பொருள் அறிஞருமான என்றி டேவிட் தோரோ ‘The universe is wider than our views of it’ என்கிறார்.

மாணிக்கவாசகர் பாடலின் அடுத்த சீர்கள் : “வளப் பெருங் காட்சி” அசர வைக்கிறது. அண்டம் தரும் காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் மாட்சியாம்! 21 -ஆம் நூற்றாண்டு NASA வின் விண்வெளிக்
கலங்களும் செயற்கைக் கோள்களும் எடுத்து அனுப்பிய வண்ணப் படங்கள் எட்டாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் கூற்று எத்துனை உண்மையானது என்று சான்று பகருகின்றன. Google, Filckr, youtube…போன்ற தளங்களில் அண்டம் பற்றிய படங்களைத் தேடிப் பாருங்கள். சில எடுத்துக்காட்டுகள் :

http://www.pinterest.com/szokiadams/our-unfathomable-universe/
(https://www.google.fr/search?q=universe&source=lnms&tbm=isch&sa=X&ei=A_FrUpitJs3whQeysIG4Aw&ved=0CAcQ_AUoAQ&biw=1680&bih=870)
http://www.flickr.com/search/?q=the+universe%2C+nasa+images
http://www.youtube.com/watch?v=8Jw27YHrugg&hd=1

அண்டம் தரும் காட்சியை அதன் அளப்பரும் மாட்சியைக் கவிஞர் வால்ட் விட்மன், “Every cubic inch of space is a miracle” என்று வியக்கிறார்.”Space is the breath of art.” என இன்னொருவர் – Frank Lloyd Wright (கட்டிடக் கலை நிபுணர்) வருணிக்கிறார். ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர், John Muir

“…flying through space with other stars all singing and shining together as one, the whole universe appears as an infinite storm of beauty.” என எழுதுகிறார்.

இப்படி அறிவியலார், அவர் அல்லாதவர் என அனைவரையும் கவரும் அண்டத்தின் காட்சி மாட்சிமை உடையதுதானே.

மணிவாசகர் பாடலின் இரண்டு அடிகளை மட்டுமே பார்த்திருக்கிறோம். நான்கு வரிகளையும் அடுத்த வாரம் காண்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *