நான்
யாரோ ஒருவருக்கு
இதமூட்டும் தென்றல் நான்
யாரோ ஒருவருக்குக்
கால்வைக்கும் படிக்கல் நான்
யாரோ ஒருவருக்குக்
கைகொடுக்கும் கைநான்
யாரோ ஒருவருக்கு
முதலில் வருமுதவி நான்
யாரோ ஒருவரின்
புண்ணுக்கு மருந்து நான்
யாரோ ஒருவரின்
புன்னகைக்குக் காரணம் நான்
யாரோ ஒருவரின்
சுமை தாங்கி நான்
யாரோ ஒருவரின்
கை விளக்கு நான்
யாருக்கோ ஒருவனாய்
யாவர்க்கும் கவிஞனாய்
வாழும் ஆசையில்
வாழ்கின்ற மனிதன் நான்
http://online.wsj.com/news/articles/SB10001424052702303753904577450841336465230