நான் யார்
சொந்தம் நட்பு காதல்
பகிர்ந்தது உணர்ந்தது இலயித்தது
அழுகை பயம் கோபம்
நெகிழ்ந்தது உணர்ந்தது மயங்கியது
பார்த்து இரசித்தல் பேசிக்கலைதல்
துயரத்துடன் பிரிதல் மகிழ்ச்சியுடன் தொடுதல்
மாறிமாறி என்னுள் மையங்கொள்ளும் உணர்ச்சியின்
சுழற்சியில் நான் சலித்து போய்
எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை என்று
யாரையும் கேட்டால் அது உன் கர்மா என்றனர்
எது அந்த கர்மா என்று பெரியோரை
கேட்டால் தெளிந்த ஞானியை கேள் என்றனர்
தேடிசலித்து நல்லதோர் ஞானியை கண்டு
அவரிடம் கேட்டால் யார் நீ என்று என்னை அவர் கேட்டார்
பெயர் ஊர் தொழில் உறவு நட்பு எல்லாம் சொல்லி
என்னை நான் அவரிடம் அறிமுகம் செய்ய
அடையாளங்கள் தவிர்த்து சொல் நீ யார்
மாறாத புன்னகையுடன் மறுபடியும் கேட்டார்
ஆமாம் சூட்டிக்கொண்ட அடையாளங்களை கடந்து
யோசித்தால் நான் யார்
http://kaleidoscope.cultural-china.com/en/10Kaleidoscope10392.html