சங்கர் சுப்ரமணியன்k-images

சொந்தம் நட்பு காதல்

பகிர்ந்தது உணர்ந்தது இலயித்தது

அழுகை பயம் கோபம்

நெகிழ்ந்தது உணர்ந்தது மயங்கியது

 

பார்த்து இரசித்தல் பேசிக்கலைதல்

துயரத்துடன் பிரிதல் மகிழ்ச்சியுடன் தொடுதல்

மாறிமாறி என்னுள் மையங்கொள்ளும் உணர்ச்சியின்

சுழற்சியில் நான் சலித்து போய்

 

எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை என்று

யாரையும் கேட்டால் அது உன் கர்மா என்றனர்

எது அந்த கர்மா என்று பெரியோரை

கேட்டால் தெளிந்த ஞானியை கேள் என்றனர்

 

தேடிசலித்து நல்லதோர் ஞானியை கண்டு

அவரிடம் கேட்டால் யார் நீ என்று என்னை அவர் கேட்டார்

பெயர் ஊர் தொழில் உறவு நட்பு எல்லாம் சொல்லி

என்னை நான் அவரிடம் அறிமுகம் செய்ய

 

அடையாளங்கள் தவிர்த்து சொல் நீ யார்

மாறாத புன்னகையுடன் மறுபடியும் கேட்டார்

ஆமாம் சூட்டிக்கொண்ட அடையாளங்களை கடந்து

யோசித்தால் நான் யார்

 

http://kaleidoscope.cultural-china.com/en/10Kaleidoscope10392.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *