நான் அறிந்த சிலம்பு – 120
மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை
“விடை கூறாது போயினும்
உமக்கு இடர் செய்யேன்;
நீங்கள் செல்ல வேண்டிய வழியில்
செல்ல அனுமதிப்பேன்” என்பாள்.
உங்களில் யாரேனும் விடையளித்தால்
முன்பு உரைத்த மூன்று பொய்கைகளைக் காட்டி நீங்குவாள்.
அரிய வேதத்தின் கண்ணாகிய
ஐந்தெழுத்து மந்திரம், எட்டெழுத்து மந்திரம் இவற்றை
ஒருமுகப்பட்ட உள்ளத்துடன் நினைத்து, வாயால் துதித்து,
அம்மூன்று பொய்கைகளுள் ஒன்றில்மூழ்கி எழுந்தால்
பெரும் பயனை அடைவீர்.
அத்தகைய பலன் அதிகத் தவத்தையுடைவர்க்கும்
கிடைப்பதற்கு மிகவும் அரியது.
அப்பொய்கையில் மூழ்கி அதன் பயனைப் பெற
நீங்கள் விரும்பவில்லையென்றால்,
அம்மலை மீது நின்றிருக்கும்
தாமரை போன்ற திருவடிகளையுடைய
திருமாலை நினைத்திடுங்கள்.
அங்ஙனம் நினைத்திடும் போது
திருமாலின் அழகிய கருடன் பொறித்த
கொடி பறந்திடும் ஓங்கி உயர்ந்த
கொடிமரத்தைக் காண்பீர்கள்.
அத்திருவடிகளைக் கண்டவுடனேயே
மலர் போன்ற திருவடிகள் இரண்டும்
உம்மை ஏற்றுக் கொண்டு
பிறவித் துயரையெல்லாம் நீக்கிவிட்டு
பேரின்பம் வழங்கும்.
இந்த இன்பம் அடைந்த பின்
மதுரைக்குச் செல்லுங்கள்.
கண்கூடாகக் காணத்தக்க அக்குகையின்
சிறப்புகள் இவையாகும்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 126 – 140
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://ww.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=159&Cat=3
மலர்சபா