அ. ச. ஞானசம்பந்தன் மக்களின் நன்கொடை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனுக்கும்
இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு.
ஆறுமுகநாவலர் பதிப்பித்த பெரிய புரணைம்,
அரசங்குடி சரவண முதலியாரின் கைந்நூல்.
அவரது சொற்பொழிவுகளுக்கு அந்த நூலே பயன்படும்.
தந்தையாரின் பெரியபுராண நுண் மா நுழை புலத்தின் வழிவந்த
அசஞாவுக்கும் அதுவே கைந்நூல்.
பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரான காலத்தில்
சனிக்கிழமை காலை சென்னையில் புறப்பட்டு
விமானத்தில் யாழ்ப்பாணம் வருவார்.
கரவெட்டி தச்சன்தோப்புத் திருக்கோயிலில் மாலைச் சொற்பொழிவு.
ஞாயிறு மாலையும் அங்கே சொற்பொழிவு.
திங்கள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டுச்
சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் பணிக்குப் போவார்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.
1959 தொடக்கம் அவர் 2002இல் மறையும் வரை சென்னையில் எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய், இருந்தவர் பேராசிரியர் அ. ச. ஞா.
இன்றுவரை அவருடைய மக்களும் என்னைத் தன்னுள் ஒருவராகக் கருதி வருகின்றனர்.
அப்பாவின் நூல்களை அந்தந்தத் துறை சார்ந்தவரிடம் கொடுக்கிறோம் என 2013இல் மூத்த மகன் மெய்கண்டான் மற்றும் கடைசி மகள் மீரா என்னிடம் சொன்னபொழுது, நூல்களுக்கான யாழ்ப்பாணப் புலமையாளரின் தவிப்பும் ஏக்கமும் என் கண்ணில் தெரிந்தன.
யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்றேன். மகிழ்ச்சி பொங்க, 440 தலைப்புகளைத் தந்தார்கள்.
17 பெட்டிகளில் கட்டுவித்தேன். யாழ்ப்பாணம் கொணர்ந்தேன்.
இணுவில் பொது நூலகக் காப்பாளர் அண்ணா தொழிலகம் திரு. சு. பொ. நடராசா என்னை அழைத்து நூலக வளரச்சிக்கு உதவுமாறு கேட்டது என் நினைவில் இருந்தது. 17 பெட்டிகளையும் அவர்களிடம் கையளித்தேன்.
29.6.2014 மாலை 1630 மணிக்கு முறையாகக் கையளித்தேன். படங்கள் பார்க்க