யார்மனத்தில்

கே.ரவி

 

 யார்மனத்தில்

(பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்)

151_002

யார்மனத்தில் நீயிருந்து தேர்செலுத்துகின்றாய்

யாருயிர்க்குள் நீநுழைந்து குழலிசைக்கின்றாய்

 

யார்விழிக்குள் நீநிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்

யார்மொழிக்குள் கையளைந்து வெண்ணை கேட்கின்றாய்

 

யார்புனைந்த மாலைக்காகத் தோள் அசைக்கின்றாய்

யார்விரித்த குழல்முடிக்கப் போர் நடத்துகின்றாய்

எங்கிருந்தோ பாஞ்ஜசன்யம் நீ முழக்குகின்றாய்

இங்கெனக்குள் உன்நினைப்பை ஏன் விதைக்கின்றாய் – எனை

ஏன் வதைக்கின்றாய்

 

நீநடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்

நீயியக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

நீயும் நானும் வேறுவேறா கூறுவாய் கண்ணா

நீபிரிந்தென் உள்ளும்வந்து சேருவாய் கண்ணா – பதில்

கூறுவாய் கண்ணா

 

 

 

 

Share

Comments

One response to “யார்மனத்தில்”

  1. சு.ரவி

    WoW!

    Thanks for sharing my evergreen favorite composition..

    Su.RAVI 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *