யார்மனத்தில்
கே.ரவி
யார்மனத்தி ல்
(பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்)
யார்மனத்தில் நீயிருந்து தேர்செலுத்துகின்றாய்
யாருயிர்க்குள் நீநுழைந்து குழலிசைக்கின்றாய்
யார்விழிக்குள் நீநிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்
யார்மொழிக்குள் கையளைந்து வெண்ணை கேட்கின்றாய்
யார்புனைந்த மாலைக்காகத் தோள் அசைக்கின்றாய்
யார்விரித்த குழல்முடிக்கப் போர் நடத்துகின்றாய்
எங்கிருந்தோ பாஞ்ஜசன்யம் நீ முழக்குகின்றாய்
இங்கெனக்குள் உன்நினைப்பை ஏன் விதைக்கின்றாய் – எனை
ஏன் வதைக்கின்றாய்
நீநடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்
நீயியக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்
நீயும் நானும் வேறுவேறா கூறுவாய் கண்ணா
நீபிரிந்தென் உள்ளும்வந்து சேருவாய் கண்ணா – பதில்
கூறுவாய் கண்ணா
WoW!
Thanks for sharing my evergreen favorite composition..
Su.RAVI