பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
நீண்டதொரு இடைவெளிக்குப் பின் நெஞ்சம்தொடும் கவிதைமலர் தீட்டக் கண்டேன்! நெடுங்கனவுதான் கலைந்து எழுகின்ற விதம்போல நேற்றுவரை பல பணிகள் எனும் கனத்தால், இதுபோன்ற கவிச்சோலைக்குள் கைவீசி நடைபோட வழியேதுமில்லாமல் இருந்ததம்மா!!
எழுதுகின்ற கவிதையதன் உட்பொருளில் உயிரோட்டம்.. ஒருபொழுதும் மங்காமல் எழுதுகின்ற ஜெயராமசர்மா.. மறுபடியும் மலர் ஒன்றை மையமிட்டு.. எழுதுகோலின் மையெடுத்து உழுதபோது.. உண்மை பல வெளிவந்ததோ? அழகுமலர் தன்வரையில் சொல்லியதெல்லாம் ஆறறிவு படைத்த மனிதருக்கு அறிவுரையோ? முழுமையாக அவ்வழியே ஓடிய நின் கவித்திறத்தால்.. மலர்பேசும் மந்திரங்கள் மனிதருக்காக.. அதிலே எனை ஈர்த்த வரிகள் இவையென்றால் மாற்றமேது?
நீண்டதொரு இடைவெளிக்குப் பின் நெஞ்சம்தொடும் கவிதைமலர் தீட்டக் கண்டேன்! நெடுங்கனவுதான் கலைந்து எழுகின்ற விதம்போல நேற்றுவரை பல பணிகள் எனும் கனத்தால், இதுபோன்ற கவிச்சோலைக்குள் கைவீசி நடைபோட வழியேதுமில்லாமல் இருந்ததம்மா!!
எழுதுகின்ற கவிதையதன் உட்பொருளில் உயிரோட்டம்.. ஒருபொழுதும் மங்காமல் எழுதுகின்ற ஜெயராமசர்மா.. மறுபடியும் மலர் ஒன்றை மையமிட்டு.. எழுதுகோலின் மையெடுத்து உழுதபோது.. உண்மை பல வெளிவந்ததோ? அழகுமலர் தன்வரையில் சொல்லியதெல்லாம் ஆறறிவு படைத்த மனிதருக்கு அறிவுரையோ? முழுமையாக அவ்வழியே ஓடிய நின் கவித்திறத்தால்.. மலர்பேசும் மந்திரங்கள் மனிதருக்காக.. அதிலே எனை ஈர்த்த வரிகள் இவையென்றால் மாற்றமேது?
விழுகின்ற மலர்பார்த்து
விழுதழுதல் மாட்டோம்
விழுவது எழுவதற்கென
விழித்தெழிந்து நிற்போம்
கிட்டிய நல்வாய்ப்பாய் கவிதை இன்பம்..
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
உம் கவிதை ஒவ்வொன்றும் தொட்டு அணைத்து அதனால் ஊறும் எந்தன் மணற்கேணி.. கற்று அதன்மூலம் பாடும் என் கவித்திறனே அறிவு!!
அன்புடன்..
காவிரிமைந்தன்
அன்றலர்ந்த மலரின் அமுதமொழிள்
நன்றினும் நன்று நன்று!