தலைநிமிர்ந்தென்றும் வாழ்க !

0

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்  

மண்ணிலே நல்ல வண்ணம்
வாழ நாம் வேண்டுமாயின்
கண்ணிலே பெண்ணை வைத்துக்                       indian woman
காத்திடல் வேண்டும் அன்றோ? 

உண்டிடும் சோறும் ஆகி
உணர்வுடன் கலந்து நின்று
மண்ணிலே எம்மைக் காக்கும்
மருந்துமே பெண்கள் தானே! 

சிவனது பக்கம்தன்னில் உமையவள் இல்லாவிட்டால்
அவனது சக்தியெல்லாம் அசைவிலா நின்றேபோகும்
எமனது கையிற்பட்ட இன்னுயிர்க் கணவன்தன்னைப்
புவிதனில் மீட்டுவந்த புனிதமும் பெண்மையன்றோ! 

பாரதிகண்ட அந்தப் பக்குவம்வந்த பெண்ணை
நாமெலாம் காணும்போது நமக்கெலாம் பெருமையன்றோ?
ஊரெலாம் பெண்கள்வாழ்க உலகெலாம் போற்றவாழ்க
தாரணிமீது பெண்கள் தலைநிமிர்ந் தென்றும்வாழ்க! 

மங்கலம்தருவார் பெண்கள் மதியுமாயும் இருப்பார்பெண்கள்
பொங்கிட இன்பம்தந்து பொறுப்புடன் இருப்பார்பெண்கள்
இங்கிதம்தருவார் பெண்கள் எதையுமே பொறுப்பார்பெண்கள்
எங்களின் வாழ்விலென்றும் இலட்சுமி பெண்கள்தானே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.