unnamed

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

போகட்டும் என் கண்மணி !
போகட்டும் !
காதல் என்பது புளுகு மூட்டை
இனிக்கும் வேதனை !
வலிக்கும் ஆலிங்கனம் !
புரிய வில்லை அது புகல்வது !
பூக்களின் கோர்ப்பை
ஊக்கிடும் என் விழிகள்
பொழியும் கண்ணீர் துளிகள் !
சுயச் சமர்ப்பணத் துக்கு
முயலும் இதயம்
வேறொன்றை வணங்கிட :
‘ஏற்றுக் கொள் என்னை
ஏற்றுக் கொள் என்னை’
என்று யாசிக்கும் மாற்றான்
முன் மண்டியிட்டு !

ஆண்டாண்டு தோறும் நாம்
துயரம் அடைவது —
எப்போ தாவது நின்று
ஒருகணம்
ஒருவரை ஒருவர்
கண்டு களிப்பது, இருவரும்
கட்டிப் பிடிப்பது —
கண்ணீர்க் கடலில் மிதப்பது
மற்றவருக் காகப் புன்சிரிப்புகள்
இவை எல்லாம் ஏற்புடைத்தா ?
வாழ்க்கை ஆனந்தமே
குறிக்கோளாய்த் தேடுவ தெல்லாம்
ஒருவன் வாழ்வுப் பூரிப்பை
அடியோடு
கெடுத்து விடுவது !

+++++++++++++++++++
பாட்டு : 313 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). கவர்ச்சிக் கானங்கள். காதலிக்கத் தேடிக் கிடைக்காத பெண்கள்

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தாகூரின் கீதப் பாமாலை – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *