பண்பாளரைப் போற்றிடுவோம்!

-விஜயகுமார் வேல்முருகன்

படைப்புகள் பல படைத்துவிட்டே
பார்க்க ஒன்றுமறியாதார் போல்
பாத்திறம் படைத்தோர் நிறைகுடமாய்
பண்பு தளும்பாதிருப்பர்!

படைப்புகள் சில படைத்ததற்கே
பாக்களுக்கெல்லாம் அரசர்தானென்று
பகட்டுவேடமிட்டே குறைகுடமாய்
பண்பற்றே தளும்பிடுவர்!

பலகனங்களைத் தோளிலும் மனதிலும் தாங்கிடுவர்
பண்பாளர் தலைக்கனம் மட்டும் தாங்காதார்
பண்படுத்தியே பண்ணியற்றிடுவர்-மனம்
புண்படுத்திடப் பண்ணியற்றார் அவர்!

பலகனங்களை நாவினில் தாங்கிடுவர்
பண்பிலாத் தலைக்கனமதைத் தாங்கியவர்
பண்பற்ற பண்ணினை இயற்றிடுவர்-மனம்
புண்பட்ட நெஞ்சினை மேலும் கீறிடுவர்!

பண்புற்ற பண்பாளரைப் போற்றிடுவோம்
பண்பற்ற பண்பாளரல்லாதவரை ஓட்டிடுவோம்!

 

Share

Comments

One response to “பண்பாளரைப் போற்றிடுவோம்!”

  1. கருத்துச் சிதறல்கள் கவனத்தை ஈர்க்கிறது…
    இனிய வாழ்த்து. 
    Vetha.Langathilakam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *