தாகூரின் கீதப் பாமாலை – 3

0

image

தாகூரின் கீதப் பாமாலை – 3

புவியில் வாழ விழைகிறேன் !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

வனப்பு மிகும் இந்த வையத்திலே
இறக்க விரும்ப வில்லை !
வாழத்தான் விழைகிறேன்
மானிடரிடையே !
பரிதியின் வெளிச்சத்திலே
மலர்கள் விரியும் வனங்களிலே
அனைத்து உயிர்களின்
இதயத்திலே
எனக்கோர் தனியிடம் வேண்டுவேன் !
உறவும், பிரிவும் சேர்ந்து
முறுவலும், கண்ணீரும் பெருகி
ஓயாத அலைகளாய்ப்
பூதளம் நெடுவே
உயிரினப் பிறவிகள்
விளையாடி வருகின்றன
இடைவிடாது !
மானிடரின்
இன்ப துன்பத்தைப் பின்னி
அழிவில்லா
ஓர் உலகம் தன்னை
உருவாக்க விரும்புகிறேன் !
அப்பணி
முடியாமல் போயினும்
உம்மோடுதான்
வாழ்நாள் முழுதும்
வசிக்க விழைகிறேன்,
காலையிலும் நடுப் பகலிலும் நீ
பறித்திட ஏதுவாய்
புதியதாகப்
பூக்கள் மலர்ச்சி போல் இசைப்
பாக்கள் எழுதிக் கொண்டு !
நான் சமர்ப்பிக்கும்
பூக்களை ஏற்றுக்கொள்
பூரிப்புடன் !
அந்தோ ! அவற்றை நீ
அகற்றி விடு, அவை யாவும்
வாடி வதங்கி
மாய்ந்து போவதால் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mumbai : 400023

*********************

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.