நினைவாஞ்சலி- ஜெயகாந்தன் அவர்களுக்கு
நாகினி
இலக்கியப் பசியுள்ளவர்க்குப்
புசிக்க ‘ஒரு பிடி சோறு’ தந்து
‘இனிப்பும் கரிப்பும்’ நிறைந்த
புவி வாழ்வினில் ‘தேவன் வருவாரா’ யென
ஏங்கும் ‘மாலை மயக்கம்’ உள்ள மாந்தருக்கு
நொடிதோறும் வாசிக்கும் ‘யுகசந்திப்பு’ டன்
சமூக அவலமெனும் ‘உண்மை சுடும்’ என
‘புதிய வார்ப்பு’களாய் இலக்கியமொழி பகர்ந்து
‘சுய தரிசனம் ‘ தந்தீரே ஐயா!
‘இறந்தகாலங்களி’ல் நடந்ததை மறக்க
ஆசானாய் ‘குருபூடம்’ ஏறி
வாழ்வியலில் துயர் ‘சக்கரம் நிற்பதில்லை’யென்றாலும்
பொறாமை பகையாம் ‘புகை நடுவினிலே’
‘சுமை தாங்கி’யாய் வாழ்ந்திட உரைத்தி ன்று
காலன் விளையாட உயிர்க்கூடு விட்டு
‘பொம்மை’ஆகி விண்ணுலகு சென்றதேனோ ஐயா!
அடைப்புக் குறியிலுள்ளவை அனைத்தும் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதை தொகுப்புகள்..
.. நாகினி