கவிஞர் காவிரிமைந்தன்.

அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்

புலவர் புலமைப்பித்தனின் பூந்தமிழ்வரிகள்… இளையராஜாவின் இசையில் துள்ளிகுதிக்க… டி.எல்.மகராஜனுடன் பி.சுசீலா குரல்கள்…மணிரத்னம் இயக்கத்தில் பாலகுமாரன் வசனம் எழுத… சுஜாதா புரொடக்ஷன்ஸாரின் படைப்பில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம்! கமலஹாசன் நடித்த படங்களில் முன்னிலை வகிக்கும் அளவு முத்திரை பதித்த படம்!

கதையின் நாயகன் தங்களைக் காப்பாற்றும் தருணத்தை ஊரே கூடி மகிழ்கிறது! அந்த மகிழ்ச்சியை ஒரு திரைப்பாடலில் தரலாம் என்று எண்ணி அதற்கேற்ற பின்னணிகளை வடிவமைத்திருக்கிறார்கள். ஹோலி பண்டிகையின்போது அள்ளித்தெளிக்கும் வண்ணக்கோலங்கள் ஒருவர்மீது ஒருவராய் வீசப்பட… அன்பின் பரிமாணமாக அது பரிமாறப்படுகிறது!

கமலஹாசனுடன் சரண்யா இணைசேர்ந்து நடிப்பில் வரலாறு படைத்த படம்! இசைஞானியின் இசையில் நாம் அந்தக் கதையோடு ஒன்றிவிடுகிறோம். இந்திய திரை வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும் பொன்னெழுத்துக்களில் மின்னும் படமாக நாயகன்… வேலு நாயக்கர் என்னும் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்தந்திருக்கும் உன்னத நடிப்பும் சரி… இப்பாடலில் சேற்றிலும்கூட விழுந்து புரண்டு எழுந்து நடக்கும் நடையிலும் சரி… முற்றிலும் புதிய கமலஹாசனை வடித்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் கேமராவில் பதிவான பவித்ரமான கலைப்படைப்பு என்னும் தகுதியை இந்தக் கூட்டணி பெறுகிறது!

சந்தோஷம் என்பது சங்கீதத்தோடு சேரும் போது… வருகின்ற சந்தங்களைப் பாருங்கள்!

சொந்தங்களோடு மகிழ்கின்ற காலங்கள் எப்போதும் இன்பங்களை முழங்குவதைக் கேளுங்கள்!

புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாட்டுவரிகள்… இசையில் பவனிவரும்போது… இன்பத்தின் துள்ளல்கள் இந்தப் பாட்டு முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது!

pulamaipiththan463ilayarajaSusheela131108_1cT L MAHARAJAN

 

அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம்
ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
[அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]

நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
[அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]

பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
வீடுதோரும் மங்களம் இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
[அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]

காணொளி: https://youtu.be/euICZmupFJ0

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *