நிலவுப்பொழுதின் நினைவலைகள்!

-முகம்மட் ஜரூஸ்

விழித்திருந்து
            ஏன்
     இரவுதனை
         மெல்ல
   நகர்த்துகிறாய்?                                    kanaka
          என்
    விழியோரம்
           ஏன்
        விழுந்து
  பிம்பமாகிறாய்?

வட்டம் போட்டு
         எனில்
     திட்டங்கள்
         என்ன
    தீட்டுகிறாய்?
          வரும்
  வழியெல்லாம்
        எனக்கு
           ஏன்
    நிழலாகிறாய்?

நீலவானில்
          உன்
முற்றுகை!

நீர்நிலை
      எல்லாம்
      உன்
முகத்திரை!

அகிலத்தினது
        ராணியா
             நீ?
நித்திரையில்
          வந்து
            ஏன்
   சித்தரிக்கிறாய்?
        கனவுகள்
           வந்து
  பந்தி விரிக்கின்றதே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *