மனதில் உறுதி வேண்டும்!

0

-துஷ்யந்தி, இலங்கை

உடலின் நிறமதை பார்த்து – அதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் கொண்டு
உலகில் பிரிவினை செய்தே – என்றும்
வேற்றுமை காண்பவன் மனிதன்!

திடமாய் உடலது இருக்க – அதில்
தெளிவாய் மனமது இயங்க,
கைநீட்டுவதில்லை மண்ணில் – பிறர்
தயவென்று போவதுமில்லை!

வாழ்கின்ற காலத்தில் என்றும் – நாம்
செய்திடவேண்டும் நல்ல சேவை
நாளைய தலைமுறைக்கு நாமும் – ஒரு
பாடமாய் வாழ்ந்திட வேண்டும்!

ஊனம் உடலிலே இருந்தும் – நித்தம்
உழைத்து வாழ்ந்திட வேண்டும்
பாடம் சொல்லிடும் வாழ்வை – நாம்
பரிசாய் ஏற்றிட வேண்டும்!

படிப்பில் வருவதில்லை பண்பு – உயர்
குணத்தால் வருவதே பண்பு
பண்டிதர் வேடம் பூண்டு – பிறர்
காலில் கிடப்பதும் முறையோ?

மண்ணிலே பிறந்தவர்க்கெல்லாம் – இறைவன்
அழகிய வாழ்வைத் தந்தான்
கடலிலே கிடக்கும் முத்தாய் -அதை
தேடுதல் தானே கடமை…!

தடைகள் வந்தபோதும் – அவை
படிக்கற்கள் என்று எண்ணி
திடமாய் முடிவெடுத்திட்டால் – வாழ்வு
நிச்சயம் வெற்றியாய் மாறும்…!

உறுதியுடன் போராடு நண்பா – நித்தம்
ஊருக்காய் உழைத்திடு நண்பா
இன்று விதைத்திடும் நன்மை – உனக்கு
நாளை பயன்தரும் நண்பா…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.