கலங்கரை விளக்கமே!

Written by

in

-துஷ்யந்தி, இலங்கை

காரிருள் நீளுகையில்
கரைகாட்டுவதும் நீயே…
கதியற்று நிற்போர்க்கு
ஒரு வழிகாட்டுவதும் நீயே…!                            lighthouse

எட்டுத்திக்கும் பார்க்கும்படி
எழில் காட்டுவதும் நீயே….
ஏழை மீனவனுக்கு வாழ்வில்
ஒளியேற்றுவதும் நீயே….!

தீவொன்று உண்டென்று
திசை காட்டுவதும் நீயே….
’ஓ’வென்று அழுவோர்க்கு
மனக்குறை நீக்குவதும் நீயே….!

கடலன்னைக்கு நீ
அழகிய நிலவானாய்….
அதனால் உயர்ந்த
கலங்கரை விளக்கானாய்….!

வணிகனும் உன்னால்
தேசம் வந்தபோனான்
வளங்களை இங்கே
வற்றாது வைத்துப்போனான்…!

குறைவில்லா செல்வம்
தினம் இங்கே கொழிக்க,
இரவெல்லாம் நீ ஒளிகாட்டினாய்
இன்னும் காட்டுவாய் ஒளிநீயே
தேன் தமிழ் எட்டுத் திசையும்
வான்பாடுமளவு முழங்கிடவே…!

 

Share

Comments

One response to “கலங்கரை விளக்கமே!”

  1. கவிஞர் பா.ராஜசேகர்

    மிகவும் 
    அருமை 
    நட்பே !

    வாழ்த்துக்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *